RSS

Tag Archives: உடலுறவு

கட்டுக்கதைகள்

உறவு

உறவு

1. எங்களுக்கு பெரிய மார்பகங்கள் பிடிக்கும்!

இல்லை. கண்களைப் பார்க்காமல் கழுத்துக்குக் கீழே பார்த்துப் பேசுவதை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள்.

2. ஆண்களைக் கவர அழகாக ஆடை அணிகிறோம்!

எங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்க அல்லது மற்ற பெண்களை விட நன்றாக தெரியவேஅழகாக ஆடை அணிகிறோம்.

3. எப்போதும் உணர்வுகளைப் பகிர விரும்புகிறோம்!

உடலுறவுக்குப் பிறகு டி.வி. பார்க்கவோ தூங்கவோ ஆசைப்படுவது ஆண்கள் மட்டுமல்ல. நீங்கள் கோமாளி மாதிரி நடந்துகொண்டதை சுட்டிக்காட்டியதால் உங்கள் மனம் புண்பட்டதை நாங்கள் அறிய விரும்பவில்லை.

4. நாங்கள் மோசமான மூடில் இருந்தால் மாதவிடாய் என்று அர்த்தம்!

ஒரு பெண்ணால் ஒரே சமயத்தில் பல வேலைகளைய் செய்யமுடிகிறது. ஒரு ஆண் ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்கிறான். இது எப்படி என்று புரியாதததுதான் ஒரு பெண் மோசமான மூடில் இருப்பதற்குக் காரணம்.

5. எங்கள் பாலுணர்வு ஆண்களைவிடக் குறைவு!

ஆண்களுக்கு 18 வயதில் பாலுணர்வு அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் முப்பதுகளின் நடுவில் ஆர்வம் இழந்துவிடுவது எல்லாப் பெண்களுக்கும் கிடைத்திருக்கும் அனுபவம்.

6. நாங்கள் ஒட்டிக்கொண்டு விடுவதேயில்லை!

நீங்கள் எங்களைச் சந்திக்கும்போது எங்களிடம் முழு கவனம் செலுத்தவேண்டும் என்று நாங்கள் விரும்பலாம். ஆனால் முழு நாளும் உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதா? தேவையே இல்லை!

7. உடலுறவு நெருக்கத்திற்காக்கத்தான். திருப்தி இரண்டாம் பட்சம்தான்!

நெருக்கம் நல்லதுதான். ஆனால் நாங்கள் உங்களுக்குத் தரவேண்டும் என்றால், நீங்களும் எங்களுக்குத் தரவேண்டும். ஆதே போல பெண்களின் உடலமைப்பைப் பற்றி கொஞ்சம் கற்றுக்கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

8. பொசசிவ் குணத்தை விரும்புகிறோம்!

அடிதடியில் இறங்கும் ஆளைவிட எதிராளியை சாமர்த்தியமாக பேச்சால் வீழ்த்துபவனைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

9. சிறு வயதிலிருந்தே நாங்கள் திருமணக் கனவு காண்கிறோம்!

எங்கள் கனவு மணமகனைப் பற்றியது! திருமணத்தைப் பற்றியதல்ல.

10. முப்பது வயதிற்குப் பிறகு எங்களுக்கு உடல் பற்றித்தான் கவலை!

இன்று பெண்கள் 42 வயதில் கூட குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்களால் அந்த வயதில் தந்தையாக இருக்கமுடியுமா?

– திரைக்கதையாசிரியர் தேவிகா பகத்

 

குறிச்சொற்கள்: , , , ,

நாற்பது இப்போ முப்பது ஆச்சு

கடந்த சில ஆண்டுகளில் சமூக நடைமுறைகள் மற்றும் பாலியல் விதிமுறைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்துள்ளன. அசூயையாகக் கருதப்பட்டவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

செக்ஸில் தாராளவாத வெள்ளம் பாய்ந்துவிட்டது. திருமணம் வரை செக்ஸுக்காகக் காத்திருப்பது எல்லாம் கடந்தகால நடைமுறைகள். செக்ஸ் கிடைப்பது அத்தனை சிரமமானதல்ல. எளிமையாகவும், கட்டுப்பாடற்றும் கிடைக்கும் வஸ்துவாக மாறிவிட்டது.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திருப்தியை விரும்புகின்றனர். பள்ளிப் பைகளில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளைக் காணமுடிகிறது. பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கட்டற்ற காமம் பரவிவருகிறது.

இது வெறுமனே சூழ்நிலையின் ஒரு கோணத்தைத்தான் காண்பிக்கிறது. இதன் பின்விளைவுகள் மிகவும் பாதகமானவை. பாலுறவின் ஆயுள் அபாயத்தில் உள்ளது. முன்பெல்லாம் 40 வயதில் ஒருவருக்கு பாலியல் ஆரோக்கியம் குறையுமானால், தற்போது 30 வயதிலேயே அந்நிலை ஏற்படுகிறது. பணிரீதியான அழுத்தமும் கடுமையான ஆற்றலைக் கோரும் வாழ்க்கையும் செக்ஸைப் பின்தள்ளிவிட்டன. தம்பதிகளில் இருவரும் பணிக்குச் செல்லும்போது நிலைமை இன்னும் மோசமடைந்து விடுகிறது.

அடிக்கடி மாறுதல்கள், வேலைத்திறன் சார்ந்த மதிப்பிடுதலின் அழுத்தங்கள், மனஅழுத்தம், பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் ஏற்படும் கவலைகள் சமூகவெளிகள் இல்லாமல் ஆவது, நெருங்கிய உறவுகளிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பது ஆகியவற்றின் தாக்கம் படுக்கை அறையிலும் பிரதிபலிக்கிறது.
அமித் கௌரி தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஊடகத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மூன்று மாதங்களாக அமித் காலை ஷிப்டில் வேலைக்குப் போகிறார். கௌரி தனது செய்தித்தாள் பணியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு வீடு திரும்புவார். அவர் வீட்டுக்கு வரும்போது அமித் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். அவர் வேலைக்குக் கிளம்பும்போது கௌரி உறங்கிக்கொண்டிருப்பார். நாங்கள் எப்போதாவது உடலுறவு கொண்டாலும் அவசரமாகவும் அசிங்கமாகவும் இருக்கும். முழுமையான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க ஒரு நாள் விடுமுறை தேவையாக உள்ளது’ என்கிறார் கௌரி.

அகமதாபாத்தைச் சேர்ந்த டிஎம் மனநல மையத்தின் முன்னாள் மருத்துவ உளவியலாளரான சுரேஷ் மஜும்தார், “கடுமையான பணிச் சூழ்நிலைகள் மிக அதிகமாகப் பாதிக்கின்றன. மொபைல் தொலைபேசிகளும், கணிப்பொறிகளும் வாழ்க்கையை மாற்றிவிட்டன. நமது வாழ்க்கையை எளிமையாக அவை ஆக்கும் அதேநேரத்தில், கூடுதலான பிரச்னைகளையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு நாளைக்கு 17 முதல் 18 மணிநேரம் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. யாரும் தமக்காக ஒதுக்குவதற்கு நேரம் இல்லாமல் அவதிப் படுகின்றனர்.

இதனால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் களைப்படைந்து விடுகின்றனர். இவை அனைத்துமே ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும். இதனால் நிறையப்பேர் மதுவை நாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இது பிரச்னையை அதிகரிக்கவே செய்கின்றது” என்கிறார்.

பாலுறவுக்கான உந்துதல் இளம்வயதிலேயே தொடங்கிவிடுகிறது. சீக்கிரமாக பாலுறவு ஆரம்பிப்பதும் அதன் துரித முடிவுக்கு வழிவகுக்கிறது.  பாலியல்ரீதியான குறைபாடு எதுவும் இல்லாவிட்டால் எல்லோரும் எந்த வயதிலும் செக்ஸை அனுபவிக்கலாம். ஒருவருக்கு சிறுவயதிலேயே பாலுறவு உந்துதல் தொடங்கிவிட்டால் சீக்கிரமே அந்த உந்துதல் மங்கவும் தொடங்குகிறது’ என்கிறார் கோலாரைச் சேர்ந்த மருத்துவர் அம்ரேஷ்குமார் சிங்.

ஆரோக்கியமான பாலுறவு வாழ்வுக்கு ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் அவசியம். வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள்தான் பாலுறவு இச்சையை மங்கவைக்கிறது என்கிறார் புதுடெல்லியில் உள்ள ஹார்ட்கேர் பவுண்டேஷனைச் சேர்ந்த மருத்துவர் கே.கே. அகர்வால். ஒருவர் தன் ஆரோக்கியம் பற்றி கவனிப்பே இல்லாமல் இருப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களை நீரிழிவும் இதயநோய்களும் தாக்கிவருவது அதிகரித்துள்ளது. இந்நோய்கள் ஒருவரது பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்” என்கிறார்.

சந்தோஷம் மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ தீயை அணையாமல் காப்பற்றவேண்டியது அவசியமானது.

விமலேந்து குமார் சிங்

 

 
1 பின்னூட்டம்

Posted by மேல் மார்ச் 21, 2012 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: ,

உடலுறவில் கூட்டு வழிபாடு

சிலர் சக்சஸ் ஆகாமல் போவதற்கு ‘செக்ஸ்’ காரணம் என்பது உண்மையா?

சிலர் விஷயத்தில் உண்மையாக இருக்கலாம். ஆனால் சக்ஸஸ்-செக்ஸஸ் இரண்டுக்கும் சம்பந்தம் கிடையாது. உலக மகா விஞ்சான மேதையான ஐசக் நியூட்டனுக்கு செக்ஸ் உணர்வு ரொம்பக்குறைவு. ‘கன்னித்தன்மை’யை இழக்காமலேயே அவர் இறந்த்தார் என்று கூட சிலர் சொல்கிறார்கள். அதுவே ஓவிய மேதை பிக்காஸோ இந்த விஷயத்தில் ரொம்ப சுறுசுறுப்பானவர். செக்ஸூக்காக கடமைகளையும், சாதனைகளையும் கைவிட்டால், யாராக இருந்தாலும் கண்டிப்பாக உருப்பட முடியாது.

உலகில் தோன்றிய முதல் மூடநம்பிக்கை எது?

ஆணின் உதவி இல்லாமல் பெண் தானாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறாள்!

உடலுறவில் கூட்டு வழிபாடு

இந்தியாவின் மையப்பகுதி, உத்திரப்பிரதேச மாநில எல்லைக்குள் விந்தியாசலம் என்ற சின்னஞ்சிறிய ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள ‘பைரவ்குண்ட்’ என்ற சின்னஞ்சிறிய அமானுஷ்யமான கிராமம். இங்கு காளிக் என்று கூறிக்கொள்ளும் ஒரு வகுப்பாரின் வெறித்தனமான ஒரு உடலுறவுக் கொள்கையும், அதன் வெளிப்பாடும் இன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. ‘சம்சத் யோனி பிஹாரேஷி மத்ரியோனி பர்ஜிதே’ என்கிற அவர்களின் மூல மந்திரம், தாயைத் தவிர யாரை வேண்டுமானாலும் தாரமாகக்கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கிறதாம்.

ஆண்-பெண் உறுப்புக்களே இவர்களின் மூல தெய்வங்களான, பைரவர், பைரவியின் அடையாளமாக் கொண்டாடப்படுகின்றன.

இங்கு உடலுறவில் கூட்டு வழிபாடு பரிந்துரைக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் தசராவின் போதும், மார்ச்சில் நவராத்ரியின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கூட்(டு)ட வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். விந்து தானத்திற்கு புராணத்தையும் இழுக்கிறார்கள். சூர்யன், தர்மன், இந்திரன், வாயுதேவன் ஆகியோர் குந்தி தேவிக்கு விந்து தானம் அளித்ததாய்க் கூடச்சொல்கிறார்கள்.

தகவல் – தி வீக்,

 
3 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஏப்ரல் 17, 2011 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , ,