RSS

Monthly Archives: நவம்பர் 2013

உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா?

vg
பெண்ணுக்குத்தான் வயிற்றிலிருந்து குழந்தை பிறக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால் முதன்முதலில் தோன்றிய ‘செல்’கூட பெண்தான்! ஒரு செல் இரண்டாகப் பிரிந்தது ஒரு விதத்தில் பிரசவம்தான். க்ளோன்ஸ்! குரங்கு இனத்திலிருந்து பிரிந்து முதலில் உருவான மனிதனும் பெண்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லியாகிவிட்டது.

பெண்களின் மார்பகங்களும், தொப்புளும் தாய்மை சார்ந்த உறுப்புகள். அவற்றை கவர்ச்சிக்க்காகவும் விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்துவது தவறுதானே?
பெண்களின் மார்பகங்கள் ‘கவர்ந்திழுக்கும் சக்தி’யைப் பெற்றது எப்படி என்கிற விஷயத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எல்லா பாலூட்டிகளுக்கும் முலைக்காம்புகள் (நிப்பிள்ஸ்) உண்டு. ஆனால் வளர்ச்சி பெற்ற மார்பகங்கள் மனித இனத்தில் மட்டுமே அமைந்திருக்கின்றன. (பால் சுரக்கும் அளவுக்கும் மார்பக சைசுக்கும் சம்பந்தமே கிடையாது!)
ஆரம்பத்தில், மனிதன் மற்ற பாலூட்டிகளைப் போல பின்னால் நின்று உடலுறவு கொண்டபோது, பெண்ணின் ‘பின்புறம்’ அவனுடைய உணர்வுகளை மேலும் கிளர்ச்சியடையச் செய்தது. பிற்காலத்தில் முகம் பார்த்துப் புணரும் பழக்கம் வந்த பிறகு ஆண் அதை ‘மிஸ்’ பண்ணினான்.
அவனுடைய அந்தக் குறையை ‘விஷூவலாக’ நிவர்த்தி செய்தது (replacement) மார்பகங்களே! ஆகவே, மனித இனத்தில் மட்டும் ‘தாய்மையோடு ‘கவர்ச்சி’யையும் பெண்ணின் மார்பகங்கள் பெற்றுவிட்டன.
முப்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கப் பெண்கள் (feminists) ‘பிரா’க்களை நடுவீதியில் கொட்டி எரித்துப் போராட்டம் நடத்தினார்கள் (freedom). அது பழங்கதை. இப்போது ‘பிரா’ விஸ்வரூபமெடுத்துவிட்ட(!) கோடானுகோடி ரூபாய் பிஸினஸ்! ஒவ்வொரு சூழ்நிலைக்கும், மூடுக்கும்கூட பிராக்கள் இப்போது தயாரிக்கப்படுகின்றன.
சான்ஸே இல்லை… மனித இனம் இருக்கும் வர மார்பக ‘அப்ஸெஷன்’ இருக்கத்தான் செய்யும்.
உலகில் உயிர் என்பது தோன்றி, பிறகு நூறு கோடி ஆண்டுகளுக்கு ஆண் என்பதே கிடையாது! ஒரு (பெண்) செல் இரண்டாகப் பிரியும். அது நாலாகும். நாற்பதாகும். ஆணே இல்லாமல் குழந்தை பெறுவது மாதிரிதான்!
அப்படியே தொடர்ந்திருந்தால், ‘க்ளோன்கள்’தான் தோன்றியிருக்கும். உலகம் முழுவதும் ஒரே மாதிரி தோற்றமளிக்கும் பெண்கள். அத்தனை பேரும் ஐஸ்வர்யா ராய்கள்! அதே சமயம், உலகில் ஆணே கிடையாது. எப்படி இருக்கும்?
பல கோடி வருடங்களுக்குப் முன், திடீரென ‘செல்’லுக்குள் நிகழ்ந்த ஒரு ‘ம்யூட்டேஷன்’ (கிறுக்குத்தனமான மாறுதல்) காரணமாகத் தோன்றியதுதான் Y குரோமோசோம். அதாவது ஆணுக்கான குரோமோசோம்!
X குரோமோசோமும் Y குரோமோசோமும் இணைந்தால் ஆணும் இரண்டு X கோரோமோசோம் இணைந்தால் பெண்ணும் உண்டாகும். ஆக செக்ஸ் அந்த விநாடியே தீர்மாணிக்கப்பட்டு விடுகிறது.
செக்ஸ் என்பது ஆரம்பித்தது அப்போதுதான்! கோடிக்கணக்கில் விதவிதமான அழகிகள் தோன்றக் காரணம் அந்த Y தான்! ஏழு வாரங்கள் வரை கரு ஆணுமில்லை, பெண்ணுமில்லை. ஆனால் உள்ளே மாற்றங்கள் நிகழ்கின்றன. Y குரோமோசோம் ஆணைப்படி ஆணுக்கான டெஸ்டோஸ்டரோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இன்னொரு ஹார்மோன் பெண்ணுக்கான அறிகுறிகளை நிறுத்துகிறது (suppresses).
முலைக்காம்பு (Nipple) வளராமல் அப்படியே நின்றுவிட, க்ளைடோரிஸ் வளர்ந்து ஆணுறுப்பாகிறது (Penis). உள்ளே நிகழும் இந்த வளர்ச்சிகள் தெரிய, ஏழு வாரங்கள் ஆகிவிடும். அந்த Y குரோமோசோம் எப்படி முதன்முதலில் உருவானது. அதுதான் விஞ்ஞானிகளுக்குப் புரியாத அற்புதமான ஆச்சர்யம்!

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 23, 2013 in என் கடிதங்கள்

 

குறிச்சொற்கள்: , , , ,

விருத்தசேதனம் – சுன்னத்

சுன்னத்

(அறுவைச்சிகிச்சையும் அறிவியல் உண்மைகளும்)

சுன்னத் அல்லது விருத்தசேதனம் எனப்படுகின்ற அறுவைச்சிகிச்சை ஆண்களுக்கு, பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை செய்யப்படுகின்ற மருத்துவ முறையாகும், இந்த வழக்கத்தை உலகில் பல்வேறு நாடுகளில் வசிக்கின்ற இஸ்லாமிய பெருமக்களும் கிருஸ்தவர்களும் மற்றும் யூதர்களும் மத ரீதியாக ஒப்புக்கொண்டு இந்த நடைமுறையை வாழ்வியல் அங்கமாக கடைபிடித்து வருகின்றார்கள்.

சுன்னத் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றாகும். ஆண்குறியின் நுனித்தோலை குறிப்பிட்ட அளவு அறுவைச்சிகிச்சை மூலம் நீக்கி வருகின்ற முறை சுன்னத் எனப்படும். அறிவியல் ரீதியாக அதனால் ஏற்படுகின்ற சாதகம் பற்றி மருத்துவர்கள் மத்தியில் உலகளவில் பல கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

imagesCALSS0V9

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:-

1.  சிறுவயதுமுதல் பிறவியிலேயே ஆண்குழந்தைகளுக்கு ஆண்குறியில் ஏற்படுகின்ற பல விதமான நோய்களுக்கு சுன்னத் செய்து கொள்வதே பரிகாரம். ஆண்குறியின் நுனித்தோல் வீங்கிக் கொள்வது, மூடிக்கொள்வது, (Phiஅழளளை) சிறுநீரில் கிருமித்தொற்று போன்ற பல வியாதிகளுக்கு இது விடுதலை தருகின்றது.

2.  வயதான காலத்தில் இன்று சர்க்கரை வியாதி உலகமக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்குறியில் (குரபெரள) பங்கஸ் எனப்படுகின்ற பூஞ்சைக்காளான் வியாதிகளால் ஏற்ப்படும் பாதிப்புகள் சுன்னத் செய்வதால் ஏற்படாது.

3.  திருமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு முதலிரவில் ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கு முக்கியமாக ரத்தக்கசிவு, நுனித்தோல் சுருண்டுகொள்ளுதல் (Pயசய Phiஅழளளை) உடலுறவில் ஏயற்படுகின்ற வலிகள் சுன்னத் செய்து கொள்வதால் நிவாரணம் கிடைக்கின்றது.

சமீப காலத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி இந்நிய மக்கள் தொகையில் சுமார் ஒன்பதரைலட்சம் பேருக்கு வைரஸ் கிருமிகளால் புற்று நோய் ஏற்படுகிறது. முக்கியமாக பெண்களுக்கு கற்பப்பைவாயில் ஏற்படுகின்ற அந்த புற்றுநோய் ர்ருஆயுN PயுPஐடுடுழுஆயு ஏஐசுருளு (ர்Pஏ) என்ற வைரஸ்கிருமி தாக்குதலால் பெண்களின் கற்பப்பைவாய் கிருமி புற்றுநோய் ஏற்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த கிருமி தாக்குதல்; சுன்னத் செய்துகொண்ட ஆண்களின் மனைவிகளுக்கு 28மூ நோய் ஏற்படுத்துகின்ற வாய்ப்பினை குறைப்பதாகக் ஆராய்ச்சிக் குறிப்புகள் கூறுகின்றன. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகின்றது. ஆண்குயிறியின் தோல்கள் வெட்டப்படாமல் (சுன்னத் செய்யப்படாமல்) இருக்கும் பட்சத்தில் தோலுக்கடியில் இருந்து ர் P ஏ வைரஸ்கிருமிகள் தங்கி வளர்வதற்கும்; பெண்களுக்கு அந்த நோயை பரப்புவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

உதாரணமாக : வீட்டைச்சுற்றி கழிவு நீர் தேங்கினால் கொசுக்கள் வளர்வதற்கும் அதன்மூலம் மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா போன்ற நோய்கள் எவ்வாறு மனிதனை தாக்குகின்றதோ அதைப்போன்று சுன்னத் செய்யப்படாத ஆண்களின் இனவிருத்தி உறுப்புகள் பல்வேறு பால்வினை நோய்களுக்கும்; புற்றுநோய் உண்டாக்கக் கூடிய வைரஸ் கிருமிகளுக்கும் வளர்ச்சியடையக் கூடிய கழிவுநீர் கிடங்காக அமைந்துவிடுகின்றது.

ஆண்களுக்கு சுன்னத் செய்து கொண்டால் செக்ஸ் உணர்வு குறையுமா என்ற பயமிருக்கின்றது. ஆனால் மருந்துவ ஆராய்சிகளின்படி அத்தகைய பக்க விளைவுகள் எதுவும் இதனால் ஏற்படாது. சுன்னத் செய்து கொள்வதால் நல்ல குடும்ப உறவும், பால்வினை நோய் இல்லாத வாழ்க்கையும், ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று ஆனந்தமாக வாழமுடிகிறது. குறிப்பாக எச்.ஐ.வி, எயிட்ஸ் போன்ற  நோய்களிலிருந்தும் பயமின்றி வாழமுடிகின்றது.

சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் தருகின்ற உண்மை இது. 8.01.2012 ஃ 16.03.2012 டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் 29.03.2012 இந்து பத்திரிக்கையில் சென்னை பதிப்பில் தரப்பட்டள்ள புள்ளி விவரம் கூறுகின்ற உண்மை இது.

இஸ்லாமிய மக்கள் வாழ்க்கையில் புற்றுநோய் வாய்ப்பு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள தகவல்.  ஜம்மு-காஷ்மீரில் 75மூ முஸ்லிம்களும் மற்றும் அஸ்ஸாமில் 40மூ முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அங்கு வாழ்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு கற்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

அதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்து கொள்வதுதான், சுன்னத் செய்து கொள்வதால் புற்றுநோயை உண்டாக்கின்ற ர்Pஏ வைரஸ் கிருமி உடலுறவு மூலம் பரவுவது தடுக்கப்படுகின்றது என்ற ஆனித்தரமான உண்மையை வெளியிட்டுள்ளார்கள். சுன்னத் செய்துகொள்வதால் ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் (Pசழளவயவந ஊயnஉநச) ஏற்படுவதும் குறைகின்றது என்று மருத்துவ விஞ்ஞான ஆராய்சிகள் கூறுகின்றன.

இத்தகைய மருத்துவக் குறிப்புகள் உலகம் முழுவதும் மக்கள் மத்தியிலே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் மொழி, மதத்திற்கு அப்பாற்பட்டு தனது ஆரோக்கியத்திலும்; தனது மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டுள்ள ஆர்வமிக்க இளைஞர் சமுதாயம் தனது ஆண்குறியில் சுன்னத் செய்கின்ற முறையை தானே முன்வந்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதன்மூலம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. ஆண்களுக்கு பல்வேறு நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கின்றது. எந்த ஒரு முறையும் மதத்திற்கு அப்பாற்பட்டு; மருத்துவ அறிவியல் சிந்தனையோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சுன்னத் என்கிற முறை உலகமக்களின் ஆரோக்கிய வழிகாட்டிக் குறிப்பில் உயர்ந்த இடத்தைப்பெற இருக்கின்றது என்பது மட்டும் மகிழ்ச்சியான உண்மை. உண்மையை யார் சொன்னாலும் ஆரோக்கியத்தை யார் சென்னாலும்; உலகமக்கள் ஆதரிப்பார்கள் என்பதை தங்களின் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.

இந்த பதிவு சுவானா என்பவர் பின்னூட்டமாக பதிவிட்டது.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 8, 2013 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , ,