RSS

Monthly Archives: ஜனவரி 2010

பின் நவீனத்துவ எழுத்து வெறும் போர்னோவா? – சாருநிவேதிதா

கலைத்துப்போடுதல், ஆபாசம், புரியாமை – சர்ச்சை – தமிழில் பின்நவீனத்துவ நாவல்கள் என்ற தலைப்பில் குமுதம்-‘தீராநதி’ அக்டோபர் 2003-ல் சாருநிவேதிதாவின் பேட்டி!

பின்நவீனத்துவ எழுத்து ஒரு ஜந்து மாதிரி தமிழ் இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. பின் நவீனத்துவ நாவல் என்று தங்களுடைய எழுத்துக்களுக்குத் தாங்களே சான்றிதழ் அளித்துக்கொண்டு நாவலை வெளியிடுகிறார்கள். படித்துப் பார்த்தால் எழுத்து என்பதற்கு வேண்டிய அடிப்படையான அம்சத்தையே காணோம். அது என்ன வாசிப்புத்தன்மை? பலருடைய எழுத்து ஏதோ சங்கேத பாஷையாகவும், குழுஉக்குறிகளாகவும் உள்ளன. அந்தக்காலத்து சித்த மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட ஓலைச்சுவடிகளையே இவை ஞாபகப்படுத்துகின்றன. பெரும்பாலான பின்நவீனத்துவ நாவல்களின் தோல்விக்கு இதுவே காரணம். இதற்கு உதாரணங்களாக பிரேம் ரமேஷின் நாவல்கள் மற்றும் கோணங்கியின் பாழி போன்றவற்றைச் சொல்லலாம். பின் நவீனத்துவத்துக்கு நேர் எதிரான ஒரு தன்மை இங்கே பின் நவீனத்துவத்துவமாக அடையாளம் காணப்பட்டது ஆச்சர்யம்தான். ஆனாலும் முன்னுதாரணங்கள் உள்ளன. உ-ம் புரட்சி.

பின்நவீனத்துவ எழுத்தின் முக்கிய தன்மை- ரொலாந் பார்த் குறிப்பிடும் PLEASURE OF THE NEXT. இங்குள்ள பிரதிகளைப் படிக்கும்போது தகரத்தை சிமென்ட் தரையில் தேய்ப்பதைப் போன்ற நாராச உணர்வே ஏற்படுகிறது. இதற்கு மாறாக உலக இலக்கியத்தில் பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களாக அறியப்படும் உம்பர்த்தோ எக்கோ, இடாலோ கால்வினோ, ஜெர்ஸி கோஸின்ஸ்கி போன்றவர்களின் எழுத்து ஒரே வாசிப்பில் படித்து முடிக்கக்கூடிய அளவுக்கு சுவாரசியமானவை. எக்கோவின் நாவல்கள் வணிக எழுத்தாளர்களின் விற்பனையையும் மிஞ்சியவை. இதே ரீதியில் ‘நாங்களும் சுவாரசியமாய் எழுதுகிறோம்’ என்று புறப்பட்டசில பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் நாவல்களோ கலைத்தன்மை ஏதுமற்று, தட்டையான மொழியில் உள்ளதால் இவற்றின் ‘எளிமை’ கலையின் பாற்பட்டதாக அல்லாமல், வணிக எழுத்தின் தரத்திலேயே நின்று விடுகிறது. எனவே வணிக எழுத்தாகவும் அல்லாமல், இலக்கியமாகவும் ஆக முடியாமல் காணாமல் போகும் துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

தமிழவன், எம்.ஜி.சுரேஷ் போன்றோரின் உற்பத்தி இதற்கு உதாரணம். இந்த இடத்தில் நாம் வேறு ஒருவரை நினைவு கொள்ள வேண்டும். அவர் வணிக எழுத்தின் அத்தனை கூறுகளையும் எடுத்து அவற்றையே கச்சாப் பொருளாகக் கொண்டு ஒரு புதிய பின்நவீனத்துவத்துவ எழுத்துப்பாணியை உருவாக்கிய டொனால்ட் பார்த்தெல்மே.

பின்நவீனத்துவத்துவத்துக்கு முந்தைய எழுத்தாளர்களான கு.பா.ரா., அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம் போன்றவர்களின் எழுத்தில் நாம் கண்டுணர்ந்த கலைத்தன்மையும், சுவாரசியமும் பெரும்பான்மையான பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களிடம் இல்லை. காரணம்? தெரியவில்லை. கோட்பாடுகள் தெரிந்த அளவுக்கு இலக்கியம் தெரியவில்லையோ? பின்நவீனத்துவத்துவ எழுத்தின் இந்தக்குறைபாடுகள் இலக்கியத் தயிர்வடைகளுக்கும், பத்தாம்பசலிகளுக்கும் நல்வாய்ப்பாகப் போய்விட்டது. ‘இதுவரை அரைத்துவந்த பழைய மாவையே தொடர்ந்து அரைப்போம்’ என்ற வாதம் வலுத்துப் போனதற்கும், நம்முடைய மண், நம்முடைய வாழ்க்கை, நம்முடைய அனுபவம் என்கிற ‘கல்சுரல் சாவனிசம்’ மீட்டுறுவாக்கம் பெற்றதற்கும் இதுவே காரணம்.

இத்தகைய நபர்கள் பின்நவீனத்துவத்துவ எழுத்தின் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டு – இது ஆபாசமான எழுத்து. நம்முடைய இலக்கியத்தில் சிருங்கார ரசம் இல்லையா என்று கேட்டால், பின்நவீனத்துவத்துவ எழுத்தில் சிருங்கார ரசம் இல்லை; இது வெறும் போர்னோ என்கிறார்கள். போர்னோகிராஃபி இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. மர்க்கி தெ சாத்-இன் எழுத்து போர்னோதான். ஆனால் அது இலக்கியமாகக் கருதப்படுகிறது. அத்தகைய எழுத்தை இங்கே எழுதுவது பற்றி யோசிப்பது கூட முடியாத காரியம்! ழார் பத்தேல் எழுதிய ‘விழியின் கதை’ நாவலைப்பற்றி சூசன் சொண்டாக் ‘CHAMBER MUSIC OF PORNOGRAPHIC LITERATURE’ என்கிறார்.

போர்னோகிராஃபி இலக்கியம் என்ற ஒருவகை உருவாகி இத்தனை காலம் ஆன பிறகும், ஆபாசம், போர்னோ என்று சொல்லிக்கொண்டிருப்பது ஒருவரின் அறியாமையையே குறிக்கும். அது அவர்களின் பிரச்சனையே தவிர பின்நவீனத்துவத்துவ எழுத்தாளர்களின் பிரச்சனை அல்ல.

அடுத்து ஜெயமோகனின் நாவல்களை பின்நவீனத்துவத்துவ எழுத்து என்று சொல்லும் கோமாளித்தனம்! பின்நவீனத்துவத்துவத்தின் அடிப்படையே மையத்தைத் தகர்ப்பது. இதை ஆண்-பெண் பாலியல் தன்மையை வைத்து விளக்கிச்சொல்லலாம். ஆண்களின் பாலியல் மையத்தைக் கட்டமைப்பது. பெண்களின் பாலியல், எல்லையற்றது. தொடக்கமோ முடிவோ அற்றது. ஜெயமோகனின் எழுத்து முதல் வகையைச் சேர்ந்தது. மிக மூர்க்கமான அதிகாரக்கட்டமைப்பைக் கொண்ட அவரது எழுத்து பின் நவீனத்துவத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. அவரை எப்படி இதில் சேர்க்கிறார்கள் என்று புரியவில்லை!

 
7 பின்னூட்டங்கள்

Posted by மேல் ஜனவரி 27, 2010 in பாலியல்

 

குறிச்சொற்கள்: , , , ,

ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி!

கணவன்-மனைவி இடையேயான சந்தோஷமான ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி! கணவன்-மனைவி இடையேயான சந்தோஷமான செக்ஸ் வாழ்க்கை அவர்களுக்கு அதிக மன மகிழ்ச்சியை கொடுப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு உற்சாகத்தையும் கொடுத்து ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது.

ஆயுளை அதிகப்படுத்தும் சக்தி, இதய ஆரோக்கியம், உடல் நோயால் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்புகளை மேம்படுத்தும் ஆற்றல், புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் சக்தி போன்றவை கணவன்-மனைவி இடையேயான மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை மூலம் கிடைக்கிறது.

தலைவலி, முதுகுவலி, மனஅழுத்தம் போன்றவைகளைக் கட்டுப்படுத்துவதிலும் செக்ஸின் பங்களிப்பு இருக்கிறது. மனிதர்களிடம் கோபம், அதிக பயம், குற்ற உணர்வு, சோகம் போன்ற எதிர்மறையான உணர்வுகள் தோன்றும்போது அவர்களுடைய உடலில் அட்ரனாலின் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இது மனித உடலை மிக மோசமாக பாதிக்கும். குறிப்பாக இது நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை அதிகமாக தாக்கும்.

ஆனால் அதற்கு நேர்மாறாக செக்ஸ் உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் அள்ளி வழங்குகிறது. இது மன நெருக்கடி ஏற்படாமல் மனதைக் காப்பாற்றி அட்ரனாலின் உற்பத்தியைக் குறைத்துவிடுகிறது. அப்போது உடலில் இயற்கையாகவே இருக்கும் வலி நிவாரணியான என்டோர்பின் அதிகமாக உற்பத்தியாகி உடலுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுக்கிறது.

-டாக்டர். ஆஷாதினேஷ்.

 

குறிச்சொற்கள்: , , ,

‘கமலாதாஸ்’ சில நினைவுகள்

கவிஞர் குட்டி ரேவதியின் கமலாதாஸைபப் பற்றிய டாக்குமென்ட்ரியில் பாலியல் பற்றியும், ஆண்கள் பற்றியும், பெண்ணியவாதிகள் பற்றியும் எந்தவிதமான மனத்தடையுமின்றி நகைச்சுவை இழையோட, கமலாதாஸ் பகிர்ந்து கொண்ட கருத்துகளில் சில…

  • மாடர்ன் ஃபெமினிஸ்ட், ஆண்களை ஏன் வெறுக்கறாங்கன்னு எனக்குப் புரியலை. மத்த ஃபெமினிஸ்ட் எப்படியோ, நான் ஆண்களுக்கு எதிரானவ கிடையாது. ஆண்களே அல்லாம என்ன வாழ்க்கையை நீங்க வாழ்ந்துடப் போறீங்க…? நான் ஆண்களை விரும்பறேன். என் மூணு பசங்களும் ஆண்கள்தான். என் பிள்ளைகள், கணவர்கள், காதலர்கள் எல்லோருடைய துணையையும் நான் சந்தோஷமாக அனுபவிச்சிருக்கேன். அவர்களை என்னால மறுதலிக்கவே முடியாது. THEY ARE WONDERFUL.

  • நம்மைச் சுற்றி ஆண்கள் இருக்கணும். சோகமான நேரத்தில கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்ல, தோளோடு அணைச்சுக்க ஒரு ஆண் தேவை. அவ்வளவு ஏன்? மாடிப்படிகள் இருக்கு. உங்களால ஏறமுடியலைன்னா, உங்களோட ஆண் அழகா தூக்கிட்டுப் போவான்! உங்களால தூக்க முடியுமா?
  • பெண்கள், தங்களோட செக்ஸ் உணர்ச்சிகளை வெளிப்படுதுறதுல என்ன தப்பிருக்கு? அவங்க உணர்சிகளே இல்லாத சவம் மாதிரி இருக்கணும்னு ஏன் ஆசைப்படறீங்க? ஒரு நல்ல பொண்ணுன்னா, காலம் முழுக்க அவ அழுதுட்டே இருக்கணும்; செக்ஸ் உணர்ச்சிகளே இல்லாத மரக்கட்டையா இருக்கணும்னு சீரியல்ல காண்பிக்கிறாங்க. அப்படிப்பட்ட பொண்ணால கணவனுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும்? இந்த மாதிரியெல்லாம் சொல்றதன் மூலமா பெண்களை, விபச்சாரத்துக்குத்தான் நாம தள்ளிட்டிருக்கோம்.

  • அடிப்படையிலே ஆணுக்கும் பெண்ணுக்கும், வித்தியாசமிருக்கு. ஆண் எதனோடு வேண்டுமானாலும் செக்ஸ் வச்சுக்க முடியும். ஆனா பெண்ணால முடியாது. அவளுக்கு தேவைப்படறதெல்லாம் உணர்ச்சிபூர்வமான, ஆழமான காதல்தான். எந்த ஆண்கிட்ட ஆழமான காதல் உருவாகுதோ, அவன்கிட்டதான் ஒரு பெண்ணால தனது செக்ஸ் உணர்சிகளை வெளிப்படுத்த முடியும். அந்த உணர்ச்சிபூர்வமான காதல் ஏற்படாத வரைக்கும், தன்னை லேசா தொடக்கூட பெண் அனுமதிக்கிறதில்லை.
  • செக்ஸூங்கிறதே ஒரு அற்புதமான சக்தி… அது ஒரு தெய்வீக விளையாட்டு. அதுதான் பெண்கள்கிட்ட இருக்கிற மிகச்சிறந்த ஆயுதம். தனது ஆணுக்கான (வேறு யாருக்கோ இல்லை) பெண்ணோட காமம் இருக்கு பாருங்க… அது அற்புதமான விஷயம். அதை நீங்க மறுத்தீங்க்கன்னா, உங்க அழகை நீங்க இழந்துடுவீங்க. ஏன்னா ஒரு பெண்ணோட அழகு, அவளின் ஹார்மோன்களின் பேலன்ஸைப் பொறுத்துதான் அமையும். செக்ஸ் உணர்வை வெளிப்படுத்தாத பெண்ணைப் பார்த்தா, விளக்கு ஏற்றப்படாத வீடு மாதிரிதான் எனக்குத் தோணுது. வெளிச்சம் இல்லாத வீட்டால் என்ன பிரயோஜனம்?
  • என்னுடைய 85வது வயசில கூட, யாராவது ஒரு ஆண் வந்து, நான் உன்னை காலம் முழுக்க பத்திரமா பாத்துக்கறேன், அன்பா இருக்கேன், உன்னை அக்கறையா கவனிச்சுக்கறேன், நீ எழுத வேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னா, நான் அவனோட சந்தோஷமா போயிடுவேன். உணர்வு ரீதியான பாதுகாப்பு, உடல் ரீதியான பாதுகாப்பு- ஆண் கிட்டயிருந்து ஒரு பெண்ணுக்கு இதுதானே தேவை…!

நன்றி; குமுதம்

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜனவரி 16, 2010 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , , ,