RSS

குற்ற உணர்சி

13 மே
Image result for guilty feeling images 

அன்பே! உன் மௌனம் என்னை சித்ரவதை செய்தது உண்மை. அன்பு சுமையாகிவிடக் கூடாது என்பது உண்மைதான் என்றாலும் அறுத்துக்கொள்ளவும் ஒரு காரணம் வேண்டுமல்லவா? மனிதனை உதாசீனப் படுத்துவதுதான் பஞ்சமா பாதகங்களை விடக் கொடுமையானது.

பதில் எழுத மறுப்பதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் நான் பட்ட வேதனை… நேர் செய்து விட்டாய். யாராலும் பேசமுடியாயதை நாம் பேசி பகிர்ந்து விட்டுச் சட்டென்று விலகிப் போவது பாரம்.

உறவுகளை விட ஸ்நேகங்கள் உண்ணதமானவை. எந்த சுமையுமில்லாத நட்பு ஆரோக்கியமானவை. உன் கோபம் என்னவென்று தெரியாமல் காத்துக் கிடந்த சோர்வு என்னை அசிங்கப் படுத்தியது.

அறிவும் மென்மையும் கொண்ட ஒரு ஸ்நேகிதியை இழந்து விட்டேனோ என்று நொந்து போயிருந்தேன். பிராத்தனைக்குப் பலன் கிடைத்த மாதிரி என் வேதனைக் கடி்தத்திற்கு பயன் கிடைத்து மனமிரங்கியிருக்கிறாய். என் மனதில் அனாவசியமான ரணங்கள் ஏற்படுவதைத் தடுத்திருக்கிறாய்.

பூத்ததை எல்லாம் சூடிக்கொள்ள முடிகிறதா என்ன? அது போல வாழ்கையில் எதிர்பட்டவர்களை எல்லாம் நட்பு பாராட்ட முடிகிறதா? யாரையும் எதற்காகவும் குற்றம் சொல்ல முடியாது.  நாம் எல்லோரும் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்கள். காலம் நம் தலைக்கு மேலே இருந்து சாட்டையைச் சொடுக்குகிறது. நாம் அதன் ஆணைக்கேற்ப ஆடிக் கொண்டிருக்கிறோம். நம்க்கு நேர்வதெல்லாம் நாமாகத் தீர்மாணிப்பதில்லை. எல்லமே நம்மீது திணிக்கப் படுகிறது. இதில் யாரைக் குற்றம் சொல்வது? கு்ற்றவாளிகள் குற்றவாளிகளுக்கே தீர்ப்பு எழுதக் கூடாதல்லவா?.

உலகம் இதுவரை செய்யாத எந்த தப்பையும் நீ செய்துவிடவில்லை. நம் முன்னோர்கள் செய்யாத தப்பையா நாம் செய்துவிட முடியும். வளர்ந்த பெண்ணின் அப்பாவாக இருந்து கொண்டே மனைவி இருக்கும்போதும் இன்னொருத்தர் மீது இப்படி ஒரு ஆசையைப் படறவிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது.

இதில் என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் இது இரண்டுமே தேவையில்லாதது. முதலில் நீ ஒரு மனுஷி. ரத்தத்தாலும், சதையாலும், நரம்பாலும் உருவானவள். உனக்கென்று ஒரு ஆத்மா, உனக்கென்று ஒரு ருசி, உன்க்கென்று ஒரு வாழ்க்கை தேவை. எல்லா மனித உயிர்களுக்குமே இதுதான் நியதி. புழுங்கிக் கிடக்கும் நெஞ்சுக்குள் ஒரு புதுத்தென்றல் வேண்டுமில்லையா?

யாரும் அக்னிப் பிரவேசம் செய்யச்சொல்ல முடியாது. சட்டம் சம்பிரதாயம் ஒன்றும் பண்ண முடியாது. பக்கத்து வீட்டுக் காரிக்கெல்லாமா பயப்படுவது?. எந்த குற்ற உணர்ச்சியும் உனக்கு வேண்டாம். எது உனக்கு சந்தோஷத்தையும் சுதந்தரத்தையும் கொடுக்குமோ அதைச்செய். பெண்கள் மனந்திறந்து சொல்லாததனாலேயே  இந்த உணர்வே இல்லைன்னு சொல்ல முடியாதில்லையா? இந்தச் சமூகம் சொல்ல விடாம அடக்கி வச்சிருக்கு.

 

1 responses to “குற்ற உணர்சி

  1. ராஜேஷ்குமார்

    மே 13, 2018 at 9:16 பிப

    அருமை .. உண்மையான வரிகள் ..நிதானமாக யோசிக்க வைப்பவை …

     

பின்னூட்டமொன்றை இடுக