RSS

சளைக்காத காதல் சடுகுடு!

05 மே

girl

அறுபது வயது பெண்மணி என்னிடம், செக்ஸில் இன்பம் என்று ஒன்று இருக்கிறதாமே; உச்சகட்டம் என்ற வார்த்தையை அடிக்கடி உறவுகள் சம்பந்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சியில் கேட்டேன்; பெண்களுக்கு உச்சகட்டம் என்று ஒன்று இருக்கிறதா… என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். ஆனால் அவருக்கு பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். எனக்கு ஆச்சர்யம். நீங்கள் உச்சகட்டத்தை அடைந்ததே இல்லையா என்று கேட்டேன். அந்த இன்பத்தை அனுபவிக்காமல் இருந்துவிடுவேன் போலிருக்கிறதே என்று கதறி அழுதார். பின்னர் அவருக்கு பிள்ளைப்பேறு உண்டானது ‘வெளிவிந்து நகர்’வினால் என்று தெரிந்துகொண்டு, அந்த தம்பதிக்கு முழுமையான உறவு குறித்த பயிற்ச்சிகளுக்குப் பிறகு அந்தப் பெண்மணி இப்போது உச்சகட்டத்தை அடைந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

செக்ஸ் வாழ்க்கையில் பேரின்பம் தரும் உச்சகட்டத்தை அடைய வேண்டும் என்பது பெண்களின் முக்கியமான எதிர்பார்ப்பாகி இருக்கிறது. ஆண்களைவிட பெண்கள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். இது அதிகம் வெளியில் தெரியாத செய்தி.

ஆண் துணையின் செக்ஸ் செயல்பாடுகளையும் பெண்கள் இப்போது வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதே நேரத்தில் செக்ஸில் குறைபாடு கொண்ட ஆண்களை சென்னை நகரப்பெண்கள் உடனடியாக வெறுத்துவிடுவதில்லை. திருமண பந்தத்தை அவர்கள் இன்னும் மதிக்கிறார்கள். சரியான பேச்சுவார்த்தை மற்றும் மருத்துவச் சிகிச்சை மூலம் தனது துணையை குணப்படுத்திட முடியும் என்று அதிகமானோர் நம்புகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் திருப்தியான உறவைத் தராவிட்டால் வெளிப்படையாக சொல்லிவிட்டு வேறு துணையை தேடிக்கொள்ளவும் துணிகிறார்கள்.

செக்ஸ் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகமாகியிருக்கிறது. படுக்கை அறையில் நடந்ததை ஆண்களைவிட பெண்கள் தெளிவாக விளக்குகிறார்கள். இது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு பெண்களிடம் பஞ்சமில்லை. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது பெண்கள் மத்தியில் சகஜமாகி வருகிறது. உறவு வைத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை தண்டிக்க காவல் நிலையம் ஏறுவதற்கும் பெண்கள் இப்போது தயங்குவது இல்லை.

ஆனால் திருமணத்துக்குப் பிறகு திருமண பந்தத்தைத் தாண்டி  தனது துணை வேறொருவரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கருதுகிறார்கள். பெரியார் மண்ணில் பெண்களுக்கு சுதந்திரம் என்று மேடைபோட்டுப் பேசுபவர்கள் கூட பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதை அனுமதிப்பதில்லை. இது மாதிரியான இரட்டை மனநிலை தமியகத்தில் பல விஷயங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. தனது மனைவி நமீதா மாதிரி இருக்கவேண்டும் என்று ஏங்கும் ஆண்கள் நமீதாவை திருமணம் செந்ந முன்வரமாட்டார்கள்.

குடும்ப அமைப்பு, தனது குழந்தைகளின் எதிர்காலம் போன்ற காரணிகளுக்கு அடுத்துதான் தனது செக்ஸ் வாழ்க்கைக்கு தமிழக பெண்கள் இடமளிக்கிறார்கள். தமிழகத்தில் பழமைவாத சமூக கட்டமைப்பிற்கு உட்பட்டு பெண்கள் செக்ஸை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. செக்ஸ் என்னும் இன்பக் கலையை ஆண்கள் இன்னும் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வயது வித்தியாசமின்றி கடைசிவரை செக்ஸை சளைக்காமல் கொண்டாடவேண்டும் என்று பெண்கள் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அது அவர்களின் அடிப்படை உரிமை.

-டாக்டர். என் ஷாலினி.

 

குறிச்சொற்கள்: , , ,

5 responses to “சளைக்காத காதல் சடுகுடு!

  1. Perumal Karur

    மே 5, 2013 at 7:23 பிப

    நல்ல தகவல் நன்றி தோழி

    அடிக்கடி எழுதுங்களேன் ப்ளீஸ்

     
  2. திவாகர்

    மே 5, 2013 at 7:26 பிப

    நல்ல தகவல் நன்றி தோழி

    அடிக்கடி எழுதுங்களேன் ப்ளீஸ்

     
  3. raghavlr

    மே 14, 2013 at 9:49 முப

    What is வெளிவிந்து நகர்’? Please explain

     
  4. அன்பு தோழன்

    ஜூலை 21, 2013 at 1:53 முப

    மிகவும் அருமையாக பெண்களின் உணர்சிகளை விளக்குரிங்க மிக்க அருமை உங்களது வலை பதிவை அனைத்தையும் படித்து உள்ளேன் அருமை அருமை உங்களது பதிவுகளை எதிர் பார்க்கும் அன்பு நண்பன்

     
  5. ebe

    ஒக்ரோபர் 1, 2013 at 11:01 பிப

    அடிக்கடி எழுதுங்களேன் ப்ளீஸ்

     

பின்னூட்டமொன்றை இடுக