RSS

Tag Archives: எனக்குப் பிடித்த கவிதை

எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!

யாரோ போல் பார்த்த பார்வை …
எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!
பிறை புன்னகையில் கிரகணம் ;
கண்கள் பார்த்து பேசும் சொற்கள்
விளம்பர ஹோர்டிங்
பார்த்தபடி செல் போனில் பேசும் பாவனையில்

மிச்சமிருக்கிறதா
நெஞ்சில் என் நகத் தழும்பு ?

முயற்சித்து இருக்கிறாய்
உன் மனைவிக்கு நாம் தேர்ந்தெடுத்த
மோதிரத்தை அணிவிக்க
சுண்டு விரலிலும் சதை பிதுங்க….

நிகோடின் படிந்த உதடுகள்
கடை விழியில் உதிரக் கோடுகள்
நிறைய குடிக்கிறாய் போல…

உன்னையும் சேர்த்து
புதைத்திருக்கிறேன்
மார்பிரண்டும் பிரமிடுகளாக

அச்சம் யாதெனில்
சுரக்கும் பாலில் செத்த காதல் கலந்து
என்னையும்
பூதனை ஆக்கி விடுமோ என்பதே…..

இனியேனும் உன் மனைவியை
புணர்கையில் என்னை நினைக்காதே
உன் மகளுக்கு எப்படியோ விழுந்திருக்கிறது
எனது
சாயல்…!

– நேசமித்ரன் மித்ரா

 
9 பின்னூட்டங்கள்

Posted by மேல் மார்ச் 29, 2012 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்:

எழுத நினைத்து…



 மூன்று முடிச்சிற்கு

தலை குனிந்த பின்

குதிரை கொம்பாகிவிட்டது

பேனா பிரித்து காத்திருப்பது.

 

கிடைத்த வினாடிகளை

பயன்படுத்தி

காத்திருக்கும் போதுதான்

எங்கோ போய்

தொலைந்து விடுகிறது.

 

பசித்த குழந்தைக்கு

பால் தரும்போதோ…

கட்டிலில் அவருடன்

உடன்படும் போதோ…

வந்து நிற்கும் வரிசையாய்…

உள்ளே…

எழுந்து போய்

குறித்து வைக்க முடியாத

அவஸ்தைகளுடன்

எழுத நினைத்த விஷயங்கள்!

ஆங்கரை பைரவி.

இலால்குடி.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஓகஸ்ட் 14, 2011 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்:

ஒளிந்திருந்த முலைகள்

கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…

-முத்தாஸ் கண்ணன்

நன்றி; Rammalar’s Weblog

 
 

குறிச்சொற்கள்: ,