வீடு துறந்து செல்பவர்கள்
திரும்புவதில்லை
வெளியில் ஒருத்தி அமைந்துவிட்டால்.
சிறு காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்
என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய
எந்தச்சிறுமையும் அடைவர்
என்பதால்
அது சிற்றின்பம்.
மலையும் மலை சார்ந்த இடமும்
கொங்கைக் குறிஞ்சி
காடும் காடு சார்ந்த இடமும்
கூந்தல் முல்லை
வயலும் வயல் சார்ந்த இடமும்
வயிற்று மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும்
வாய் நெய்தல்
மணலும் மணல் சார்ந்த இடமும்
முதுகுப் பாலை.
-மகுடேஸ்வரன்.


