RSS

தீயைத் தூண்டி விட…

07 Jan

சில விஷயங்கள் மட்டுமே அனைவராலும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். உதாரணமாக செக்ஸை சொல்லலாம். தினமும் சிறப்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்பதை உலகமெங்கும் உள்ள மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால்  தாம்பத்யம் எனபதே சிரமமாக மாறியவர்களோ வயாகரா போன்ற செக்ஸ் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தி தங்களது உணர்வுகளை அதிகரித்துக் கொள்கின்றனர். 1988 ஏப்ரலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட வயாகரா விரைவிலேயே 3 மில்லியன் நபர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வாய்வழி மாத்திரை ஆண்மைக் குறைவை நிவர்த்திப்படுத்துவது மட்டுமின்றி ஒருவரது செக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் சிறந்து விளங்கியது. ஆரம்பத்தில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது, தற்செயலாக ஆண்மைக் குறைவையும் நிவர்த்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து உலகின் பல பகுதிகளிலும் அங்கிருந்த உள்ளூர் செக்ஸ் ஊக்க மருந்துகளுக்குப் போட்டியாக திகழ்ந்து வருகிறது.

2005 இல் இந்தியாவில் வயாக்ரா அறிமுகப்படுத்தப்பட்டபோது எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த அபூர்வ மாத்திரை எழுச்சிக் குறைபாட்டுடன் இருந்த 100 மில்லியன் இந்தியர்களுக்கான மந்திரச் சொல்லாகிவிட்டது. 50 மிகி மாத்திரை 463 ரூபாய் விலையில் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. உள்ளூர் சந்தைகளில் இதன் 15 வெவ்வேறு வடிவங்கள் 22 ரூபாய் விலை முதல் கிடைக்கிறது.

தனது துணையைத் திருப்திப்படுத்த யுனானி மருந்தை நம்பியிருந்த ராஜேஷ் திரிபாதி இப்போது வயாக்ராவைப் பயன்படுத்துகிறார்.  “உடனடி பலன் தருவதில் வயாக்ராவுக்கு ஈடுஇணையில்லை. நான் யுனானி மற்றும் இதர உள்ளூர் மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்போது இந்த நீலநிற மாத்திரையையே விரும்புகிறேன். மற்ற மருந்துகள் என்னைத் தூண்டுவதற்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும் போது, இது உடனடியாகத் தூண்டுவதோடு 100 சதவிகிதம் பலனைத் தருகிறது. மேலும் இந்த மாத்திரை நீண்டநேரம் செயல்படவும் உதவுகிறது என்கிறார்.

இதனால் வயாகரா முழுமையாக உள்ளூர் மருந்துகளைக் காலி செய்துவிட்டது என்று பொருளில்லை. கிராமப்பகுதிகளிலும் வயாக்ராவின் பக்கவிளைவு காரணமாக அதைச் சாப்பிட பயப்படுபவர்களின் மத்தியிலும் இவர்கள் செல்வாக்குடன் திகழ்கின்றனர்.

இந்த உள்ளூர் மருந்துகளுக்கு தனி சந்தை உள்ளது. இப்போதும் பலர் யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகளே பாதுகாப்பானவை என்று நம்புகின்றனர். ஆனாலும் வயாகராவுக்கு இணையான மாற்று மருந்து யுனானியில் இல்லை.

வயாகரா ரத்த ஓட்டத்தை அதிகரித்து செக்ஸ் திறனை அதிகரிக்க மட்டுமே செய்கிறது. அளவுக்கு அதிகமாக வயாக்ராவைப் பயன்படுத்தினால் தலைவலி, ரத்த ஒழுக்கு, ஹார்ட் அட்டாக் போன்றவை வரக்கூடும். ஆனால் யுனானியில் இதுபோன்ற பிரச்னை எதுவும் இல்லை.

சீதாராம் பாரதி மருத்துவமனையின் சிறுநீரக துறையின் தலைமை மருத்துவரான எஸ்.வி. கோட்வால், வயாகராவின் வருகை இதற்கு முன்பு வேறுவழியில்லாமல் இருந்த மக்களுக்கு ஒரு வழியைத் திறந்துவிட்டுள்ளது என்கிறார். ‘இப்போது வயாகராவின் பல வடிவங்கள் எளிதாக இந்தியாவில் கிடைக்கின்றன.’ நானே என்னுடைய பல நோயாளிகளுக்கு வயாகராவை பரிந்துரைத்துள்ளேன்’ என்கிறார்.
எழுச்சியுடன் திகழவேண்டும் என்ற கூட்டம் அதிகரித்திருப்பதன் காரணமாக ஹோமியோபதியும்கூட இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உள்ளது என்கிறது. ஆனாலும் ஹோமியோபதியில் உடனடி நிவாரணம் கிடையாது. நீண்டகால சிகிச்சைக்கு உட்பட்டாக வேண்டும்.

ஹோமியோபதியில் தாமியானா, சாலிமம் போன்றவை உள்ளன. யோகாவில் உள்ள சில ஆசனங்கள்கூட செக்ஸ் உணர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன. உள்ளூரில் உள்ள செக்ஸ் உணர்வைத் தூண்டும் மருந்துகளோடு ஒப்பிடுகையில் வயாகரா மிகவும் விலை மலிவானது என்பதே அதன் பெரிய பலம். 300 ரூபாய் செலவில் தாம்பத்யத்தில் படிப்படியான முன்னேற்றம் அடைவதை ஒருவர் உணரமுடியும்.

கட்டுரை; த சன்டே இந்தியன்

 

About உயிர்த்தோழி.

social person
Leave a comment

Posted by மேல் ஜனவரி 7, 2012 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 54 other followers