RSS

அவள் கட்டியத் தாலி…..

பார்வதிக்கு இடுப்பெல்லாம் ஒடித்து போட்டது போல வலித்தது இன்னும் ஒரு கூடை துணி துவைக்க வேண்டும் எனும் போது அலுப்பும் தொற்றிக் கொண்டது

கழுத்தில் கசகசத்த வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்  ‘ச்சை.. என்ன வாழ்கை ‘ என்று முனுமுனுத்தாள்.

அவளும் ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்தவள்தான் அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் செல்லமும் அவளின் இளமைப் பவருவத்தை தாலாட்டியதுதான்

பாழாய்ப்போன காதல் பிறந்தாலும் பிறந்தது இந்த சாரங்கனை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்தாள் இளமைக் கறைந்தது மாதிரி  சந்தோஷமும் கறைந்து போய்விட்டது.

இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு அழகும் போய் விடுகிறது உடம்பு சுகத்தில் உள்ள ஆசையும் போய் விடுகிறது.

புருஷனின் கண்சிமிட்டல் பயத்தையும் எரிச்சலையும்தான் தருகிறது இந்த நிலையை ஆண் புரிந்துக் கொண்டால் எல்லாம் சகஜமாய் போய் விடுகிறது

இல்லா விட்டால் குடும்பம் கூத்து மேடையாகி விடுகிறது இந்த உண்மை தெரியாமல் போனதால்தான் பார்வதி இன்று ஓடாய் தேய்கிறாள்.

சாரங்கன் கல்யாணம் ஆன புதுசில் நன்றாகத்தான் இருந்தான் தவறாமல் வேலைக்கு போவதும் வேளைக்கு வீட்டுக்கு வருவதும் தவறவே தவறாது.

இரண்டாவதாய் பாப்பா பிறந்தாலும் பிறந்தது அவனுக்கு சனியன் பிடித்து விட்டது அப்படித்தான் அலமேலுக் கிழவி சொன்னாள் பார்வதியும் அதை நம்பினாள்.

இரண்டறை வருடத்தில் எல்லாம் சரியாயிடும் என்றிருந்தாள் அப்புறம்தான் தெரிந்தது அவனுக்கு பிடித்த சனி அல்ல  பித்து என்று.

யாரோ விமலாவாம் அவள் புருஷன் இவளைப் பார்த்து யாரோ கண்ணடித்தான் என்று அவனை வெட்டி விட்டு வேலூர் ஜெயிலில் இருக்கிறானாம்

புருஷன் இல்லாமல் அவள் படும் கஷ்டம் சாரங்கனுக்கு சகிக்கலையாம் அதலால் அவளிடம் ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேசினானாம் அந்த பேச்சி படுக்கை அறைவரையும் தொடர்ந்து விட்டதாம்

பேச்சி மயக்கத்தில் பார்வதியே மறந்து போய் விட்டாளாம்.

விஷயம் தெரிந்த உடன் சாரங்கனை சட்டையை பிடித்து ஆக்ரோஷமாய் கூச்சல் போட்டாள்

அவன் அதற்கெல்லாம் அசர வில்லை தூசியை தட்டி விடுவது போல பார்வதி கையை தட்டி விட்டு வீட்டில் சோறு இல்லை என்றால் ஓட்டலில் சாப்பிடாமல் பட்டினியா கிடக்க முடியும் என்று போய் விட்டான்.

அன்று முழுவதும் குலுங்கி குலுங்கி அழுதாள் இப்படி பட்டவனோடு வாழ்வதை விட சாவதே நல்லதென்று முடிவுடன் எழுந்தவளை இடுப்பைக் கட்டி தூங்கி கொண்டிருந்த குழுந்தையின் முகம் உனக்கு புருஷன் சரியில்லை என்றால் நான் அம்மா இல்லாமல் அவதி பட வேண்டுமா என கேட்பது போலிருக்கவே படுத்துக் கொண்டாள்

புயலுக்கு பிறகு அமைதி வரும் என்பார்கள் அவளுக்கும் அழுகைக்கு பின்னர் ஞானம் வந்தது.

கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடம்பு சம்மந்தப் பட்டது என்று நினைப்பவன் முழு முட்டாள் உடம்பிற்குள் மறைந்து கிடக்கும் மனதை நேசிக்க தெரிந்தவனே நிறைவான தாம்பத்தியத்தை வாழ தகுதிடையவன்.

உடலாலும் மனதாலும் சோர்ந்து போனாள் மனைவி என்ற உடன் வேறொருத்தியை தேடுபவன் அதே தவறை மனைவி செய்தால் தாங்கிக் கொள்வானா?

பொண்டாட்டி கெட்டு போய் விட்டால் புருஷன் மீது அனுதாபப் படுகிறது உலகம்

அதே புருஷன் நிலைகெட்டு போனால் இவள் ஒழுங்காக இருந்திருந்தால் வேலி தாண்டுவானா அவன் என்று பெண் மீது தான் பழி போடும்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அப்படித்தான் பேசினர்கள் இவள் என்னவோ ஓழுங்கீனமானவள் என்பது போல பார்த்தார்கள் குசுகுசுவென பேசினார்கள்.

சாரங்கனை  காதலிக்கும் பொழுது என்னவெல்லாம் பேசினான் காட்டு முயல் குட்டிகள் தாய் முயல் இறந்து விட்டால் பால் இல்லாமல் செத்து விடுவதைப் போல நீ இல்லை என்றால் நானும் செத்து விடுவேன்.

நீ அழகாய் இருக்கிறாய் என்பதற்காக காதல் வரவில்லை உன் குணம் எனக்கு பிடித்திருக்கிறது உனது ஆத்மாவை நேசிக்கிறேன் நீ நடப்பது பேசுவது உட்காருவது என்று உனது ஒவ்வொரு  செயலுமே என் மனதைக் கவர்ந்து விட்டன.

நீ இல்லாத வாழ்கையை நினைத்து பார்க்கவே என்னால் முடியாது தயவு செய்து என்காதலை தூர தள்ளி விடாதே தண்ணீர் இல்லாமல் கருகும் ரோஜா செடியைப்போல் நான் வாடி விடுவேன்.இப்படி ஏதேதோ வசனம் பேசி அவள் மனதை கொஞ்ச கொஞ்சமாக கரைய செய்தான்.

ஆரம்பத்தில் அவளும் கல்லாகத்தான் இருந்தாள் போகப் போக காற்றடிக்கும் திசையில் காற்றாடி சுற்றுவது போல் அவன் வசமாக முழுமையாக வீழ்ந்து விட்டாள்’.

ஆண் இனமே இப்படித்தான் பெண்ணை வெல்ல வேண்டும் என்றால் எந்த வலையை விரித்தாவது ஜெயித்து விடும்.

பெண் மட்டும் யோக்கியம் இல்லை ஆணிடம் தோற்பதால் ஏற்படும் சுகத்திற்காக எதையும் இழக்க தயாராகி விடுவாள்

இது உலகை சிருஷ்டித்தவன் செய்யும் மாய விளையாட்டு இந்த விளையாட்டில் காலகாலமாக மானிடக் காய்கள் உருட்டப் படுகின்றன சில காய்கள்  தட்டிக் கொடுக்கப் படுகின்றது சில காய்கள் தட்டி கழிக்கப் படுகின்றன

பார்வதி கழிக்கப் பட்ட காய்களில் ஒன்று அவள் அப்படித்தான் தனது ஏமாற்றத்தை எடுத்துக் கொண்டாள்

விமலாவோடு உறவு ஏற்பட்ட ஆரம்ப நாட்களில் சாரங்கன் வீட்டுக்கு வந்து போய்தான் இருந்தான் அவள் புருஷனுக்கு ஆயுள் தண்டனை உறுதியான பின்பு அவனது வருகை முற்றிலும் குறைந்து போனது

வீட்டுச் செலவுக்கு பணமே தருவது இல்லை பச்சைக் குழந்தைகள் இரண்டை வைத்துக் கொண்டு பாவம் பார்வதி என்ன செய்வாள்

திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்பது போல புருஷன் கைவிட்ட பிறகு பிறந்த வீடுதானே கதி

அம்மா அரவணைத்துக் கொண்டாள் தனது மகளை தவிக்க விட்டவனை படுபாவி என்று வைதாள் சாபமிட்டாள் எங்கும் போக வேண்டாம் கஞ்சோ கூழோ இருப்பதை குடித்து விட்டு எங்களோடு இரு என்றாள்

அப்பா மௌனமாக அழுதார் இவளே தேடிக் கொண்ட வினைக்கு அவர் அழத்தான் முடியும் வேறென்ன அவரிடம் எதிர் பார்ப்பது பிள்ளைகளால் ஏற்படும் கஷ்டங்களை பெற்றவர்களின் கண்ணிர் கழுவியா துடைத்து விடும்

இரண்டு மாதங்கள் ஓடியது அப்பாவும் அம்மாவும் தனிமையில் இவள் மட்டும்தான் பிள்ளை என்றால் பரவாயில்லை இன்னும் இரண்டு பெண்களை வைத்திருக்கின்றோமே

வேறு ஜாதிக்காரனோடு ஓடிப்போன மூத்தவளை வீட்டில் வைத்துக் கொண்டு இளையவர்களுக்கு எப்படி வரன் தேடுவது என்று சன்னமாக பேசிக் கொண்டது பார்வதிக் காதில் சத்தமாக வெடித்து எதிர்காலத்தை கோர சித்திரமாக காட்டியது

காதலித்த கண்களுக்கு மனிதத் தரம் மட்டுமா தெரிவதில்லை சமூக மதிப்பீடுகளும்தான் தெரிவதில்லை அவள் சாரங்கனை ஜாதியாக பார்க்க வில்லை என்பதற்காக ஊருமா பார்க்காது

உள்ளுக்குள் ஆயிரம் அழுக்குகள் ஊறிக்கிடந்தாலும் வெளியில் பரிசுத்தத்தை பேசுவதல்லவா ஊரின் லட்சணம்! பணக்காரத் தவறுகளை சந்தனம் பூசி மறைத்து விட்டு ஏழையின் இயலாமையை காரித்துப்பி கைகொட்டி சிரிப்பதுதானே ஊரின் பொழுது போக்கு

பார்வதி நன்றாக யோசித்தாள் தனது துயரம் தங்கைகளுக்கு சாபமாக மாறிவிடக் கூடாது என முடிவு செய்தாள்

சாரங்கனோடு வாழ்ந்த வீட்டுக்கே வந்தாள் பிள்ளைகளின் பசித்த வயிறுகள் சமுத்திர இறைச்சலாக அவள் காதை அடைத்தது செய்ய போவது என்ன வென்று அவளுக்கு தெரிய வில்லை

ஆனாலும் மனதின் மூலையில் நம்பிக்கை விளக்கு மின்னிக் கொண்டே இருந்தது தேவைகள் தான் கண்டுபிடிப்புக்களாக மாறுகின்றன என்பதை அவள் அறிந்தே இருந்தாள்

அலமேலுக் கிழவி ரைஸ் மில்காரர் வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டுமாம் நீ வேண்டுமானால் போரியா எனக்கேட்டாள்

ஆற்று வெள்ளத்தில் புரண்டு புரண்டு ஓடியவளுக்கு பிடித்துக் கொள்ள சரியான கட்டை கிடைத்தது போல பார்வதி சந்தோஷப் பட்டாள்

குழந்தைகளின் பசியை தீர்ப்பதற்கு வழிகிடைத்ததே என்ற ஆறுதல் எந்த மலையையும் தன்னால் புரட்ட முடியும் என்று நம்பிக்க தீயை அவளுக்குள் மூட்டியது

சில காலம் செல்ல செல்ல வேறுபல வீடுகளிலும் வேலைக் கிடைத்தது அவளின் வருமானமும் போதுமானதாகியது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினாள்

மாதச் சீட்டு அதுஇதுவெனக் கட்டி பணத்தை சேர்த்து இருந்த வாடகை குடிசையை சொந்தமாக்கி கொண்டாள்

இந்த காலத்தில்தான் சாரங்கனை ஒடிந்து போன இடுப்போடு நாலுபேர் வீட்டிற்கு தூக்கி வந்தனர்

விமலாவின் வீட்டுக்காரன் பெயிலில் வந்தனாம் இரண்டு பேரயும் ஒன்றாக பார்த்தானாம் பொங்கிய கோபம் சாரங்கனின் இடுப்பை ஒடித்ததாம்

அவனை மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் பலவீனனை பழிவாங்குவது நாகரீகம் அல்ல என முடிவு செய்து மருத்துவ மனைக்கு கூட்டிச் சென்றாள்

தன்னால் முடிந்த வரை முயன்றாள் எல்லா மருத்துவரும் இனி அவன் எழுந்து நடப்பது இயலாத காரியம் என்றனர் அதற்கு மேல் அவளால் முடிந்தது ஒன்றுமே இல்லை

தான் பெற்றது இரண்டு கட்டியது ஓன்று ஆக தனக்கு மூன்று குழந்தைகள் என்று முடிவு கட்டினாள்

தெருவில் உள்ளவர்கள் எல்லோரும் பார்வதியை பாராட்டினர் எவ்வளவுத்தான் ஆனாலும் கட்டியவள் கட்டியவள்தான் ஒட்டியவள் ஒட்டியவள்தான் என்றனர்

இந்த பாராட்டு மொழிகள் எதையும் அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவர்கள் ஏசும் போது எப்படி மௌனமாக இருந்தாளோ அப்படியே இப்போதும் சலனமற்று இருந்தாள்

ஊரெல்லாம் சொல்லலாம் அவள் சாரங்கனை மன்னித்து விட்டாள் என்று ஆனால் அவள் அவனை மனதளவில் புருஷனாக ஏற்கவே இல்லை

அந்த தகுதியை அவன் அவளைப் பொறுத்தவரை எப்போதோ இழந்து விட்டான் இப்போது அவன் பராமரிக்க பட வேண்டிய ஒரு உயிர் அவ்வளவுதான்

முன்பை விட வேகமாக வேலை செய்தாள் பம்பரமராக அவள் சுழலுவதை மற்றவர்கள் வியப்போடு பார்த்தனர் அதையெல்லாம் சட்டை செய்ய அவளுக்கு நேரமில்லை

நாள் பட நாள் பட தான் ஒரு பெண் என்பதே மறந்து போனாள் அவள்  விமலாவோடு சாரங்கன் போன போது ஆத்திரத்தில் கழற்றி  அவன் போட்டோவில் மாட்டிய தாலியை அடிக்கடி பார்த்து தனக்குள் முனுமுனுத்துக் கொள்ளுவாள்

இப்போது நான்தான் உனக்கு தாலி கட்டி இருக்கேன் உன்னைக் காப்பது நானெனும் போது நீ அல்ல புருஷன்

இந்த முனுமுனுப்பு நிச்சயம் சாரங்கன் காதுகளில் விழாமல் இராது விழவேண்டும் என்றுதான் சத்தமாக முணுமுணுப்பாள்.

 
Leave a comment

Posted by மேல் பெப்ரவரி 21, 2012 in என் கடிதங்கள்

 

கன்னித்தன்மை, கற்பு, கலாச்சாரம்

”என்னால எப்படி இன்னொருத்தனோட கல்யாணங்கிற பேர்ல படுக்க முடியும்? அசிங்கமா இருக்கு. எஜாக்குலேஷன் போது அருவருப்பா இருக்காது? நான் என்ன எச்ச துப்புற தொட்டியா..? செத்துரலாமான்னு தோணுது சங்கர்.” என்றவளின் கண்களில் தளும்பி நின்ற கண்ணீர் சிறிது நேரம் நின்று சட்டென வழிந்தது. வழிந்த கண்ணீரை கைகளால் அழுத்தித் துடைத்தவுடன் ஜெயாவின் முகம் மேலும் சிவந்தது.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட வளர்ச்சியுடன், நல்ல ஓவல் சைஸ் முகத்துடன், ஈரானிய சிவப்பாய், அதைவிட சிவப்பான மெல்லிய உதடுகளையும், குட்டிக்கடல் போலக் கண்களுமாய் எப்போதும் துள்ளிக்குதித்தபடி திரியும் ஜெயா இப்படி அழுவது பார்த்து என்ன சொல்வது என்று புரியாமல் அவளையே பார்த்தேன். பாவமாய் இருந்தது. நிஜத்துக்கும், நிழலுக்குமாய் அவள் அலைக்கழிந்து கொண்டிருப்பது நன்றாக புரிந்தது. ஜெயாவுக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. ஹைதராபாத் மாப்பிள்ளை. எப்போதும் பர்ஸ் பிதுங்குமளவு சம்பளம். எந்நேரமும் அமெரிக்கா கிளம்ப சகல பேப்பர்களையும் வைத்துக் கொண்டு, இவள் மாதிரியான தேவதைகளைக் கவர்ந்து கொண்டு போகத் தயாராகயிருப்பவன். அவன் கையில் அவளைப் பிடித்துக் கொடுக்க ஜெயாவின் அப்பா துரிதத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், இவள் இப்படி வந்து என்னிடம் அழுது கொண்டிருக்கிறாள். அவளின் அழுகைக்கு காரணம் காதல்! ஆனால் அவளின் பிரச்சனை காதலால் இல்லை.
ஏதோ கல்யாணம் செய்து கொள்ளும் வரை ஒரு படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கோடு படிக்கும், அல்லது படிக்க வைக்கப்படும் பல பெண்களில் ஜெயாவும் ஒருத்தி. படிப்பில் பெரியதாய் ஆர்வமில்லாதவள். ஆனால் புத்திசாலி, அழகி, படு சுட்டி, எப்போதும் அந்த பெரிய கண்களில் தேடலுடனேயே பயணப்படுபவள். கொஞ்சம் நெருக்கமாய் பழகிவிட்டால் செக்ஸ் ஜோக்கெல்லாம் சொல்லுவாள். என்னை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாய் பார்த்தது போல ஆச்சர்யத்துடன் சொல்வாள். அவள் சொல்வது அரதப் பழசாயிருந்தாலும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
“சங்கர் உனக்கொன்னு தெரியுமா? சூர்யாவும் ஜோவும் லவ் பண்றாங்க. ஆனால் வெளியே பொய் சொல்றாங்க! வாட்ஸ் இன் திஸ்.. ஆமாம் அப்படித்தான்னு சொல்லிட்டு போய்ட்டேயிருக்க வேண்டியது தானே?”

 

ஒரு முறை மகாபலிபுரம் பீச்சுக்கு நான்,மீரா,ஜெயா மற்றும் சில நண்பர்களோடு போன போது பீச் ரிஸார்ட்டின் கடலில் உடல் முழுவதும் நனைந்து நின்றபடி, ”என்னைப் பார்த்தால் போட்ரெக் போலிருக்கிறேனா?” என்று கேட்டவளைப் பார்க்கும்போது அப்படியே அவள்மேல் பாய்ந்து கடலோடு கலந்துவிடலாமா என்று தோன்றும், அடுத்த கணம் அவள் அதைப்பற்றி எந்த விதமான சீரியஸ்னெஸும் இல்லாமல் “பசிக்குது எதாவது ஆர்டர் பண்ணு” என்பாள். பொசுக்கென ஆகிவிடும். மீராவுக்கு அவளின் நடவடிக்கைகள் பிடிக்காது. “யூ.. நோ.. ஷி ஆல்வேஸ் ஆக்ட்ஸ் லைக் எ சைல்ட்.. ஒண்ணும் தெரியாத பாப்பா போல் நடிப்பது. டிராயிங் அட்டென்ஷன். உங்களைப் போன்ற ஆண்களுக்கும் அந்த மாதிரி நடிப்பவள் பின்னால் தான் அலைவீர்கள். பெண்கள் அவ்வளவு ஒன்றும் இன்னொசண்ட் அல்ல சங்கர்.” என்பாள்.
அவள் சொல்வது ஒரு விதத்தில் நிஜமெனப் புரிந்தாலும் ஜெயாவுக்காக அவள் பின்னலையும் நாய்க்குட்டியாய்க்கூட இருக்கலாம் என்றுதான் தோன்றும். இப்படி அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்த காலத்தில் திடீரென ஜெயா என் தொடர்பு எல்லைக்கு வெளியே போக ஆரம்பிக்க, போன் செய்தால் கூட நான் கூப்பிடறேனே சங்கர், என்றோ.. எக்ஸாம் வருதில்ல … அதான் கொஞ்சம் பிஸி என்றோ ‘டபாய்க்க’த் துவங்கினாள்.

தேவிபாரடைசின் அரையிருட்டு ஒளியில் ஜெயாவை ஒரு பையனோடு பார்த்தேன். ஒல்லியாய் சற்று கருப்பாய் ஏறக்குறைய மெகா சைஸ் பல்லி மாதிரி இருந்தான். எனக்குள் ஒரு பந்து தொண்டைக்குள் உருள ஆரம்பித்தது. நான் அவர்களைக் கவனிக்காதது போல வந்த ரெண்டாவது மணி நேரம், ஜெயா எனக்கு போன் செய்தாள். “உடனே வா.. உன்னை மீட் பண்ணனும்” என்றாள்.
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு ஜெயா.” என்றேன்.

 

“கட் தட் கிராப் ஒர்க்.. எனக்கு தெரியும் நீ வருவாய். இன்னும் அரை மணிநேரத்தில். லாயிட்ஸ் ரோட் சரவணா கேக் ஷாப். என் செல்லக்குட்டில்ல.. உடனே வருவியாம்” என்று கெஞ்சலாய் சொன்னதும் மனசுக்குள் இருந்த நாய்க்குட்டி வாலாட்ட ஆரம்பிக்க, மறுப்பேதும் சொல்லத் தோன்றாமல் அடுத்த இருபது நிமிடத்தில் அங்கிருந்தேன்.
அதே தியேட்டர் அரையிருட்டுப் பையனுடன் உட்கார்ந்திருந்தாள். வெளிச்சத்தில் இன்னும் மொக்கையாய்த் தோன்றினான். என்னை விட என்ன கண்டு விட்டாள் இவனிடம்? “சங்கர்.. இது ப்ரகாஷ்.. ப்ரகாஷ் இது சங்கர். சங்கர்.. யு..நோ.. உன்னிடம் சொல்லாமல் என் வாழ்க்கையில் எதுவும் இருக்கக்கூடாது. ஐம் இன் லவ்.. வித் ப்ரகாஷ்.. எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. மூன்றே மீட்டிங்கில் காதல் வருமா? எனக்கு வந்துவிட்டது. ஐம் ஜஸ்ட் த்ரில்ட். என்ன விஷ் செய்ய மாட்டாயா? அப்படி பார்த்திட்டிருக்கே? ஓகே.. சரி. அப்புறம் என்ன சாப்பிடுகிறாய்?” என்று கேட்டுவிட்டு.. “ ஒரு ப்ளாக் கரண்ட் வாங்கு ப்ரகாஷ்.. ஹி லவ் தட்” என்று ஆர்டர் செய்தாள். “எனக்கு பிடித்ததையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயே ராட்ஸசி.. என் மனதை தெரிந்து வைக்கவில்லையா?” மனதினுள் புலம்பினேன்.
பையனை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் போலியாய் ‘யா.. யா.. ஃபக், ஷிட் என்று யாக்கிங் ஆங்கிலம் பேசினான். எரிச்சலாயிருந்தது. கேக்கை என் முன்னால் வைத்துவிட்டு, அவர்கள் இருவர் மட்டும் பேசிக் கொண்டேயிருந்தார்கள்.
அதன் பிறகு நான் ஜெயாவை சந்திக்கும் போதெல்லாம் அவன் கூட இருந்தான் அல்லது ஜெயா அவனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அது எனக்கு எரிச்சலாய் இருந்தது. ‘என்ன எழவு லவ்வுடா இது! இதற்கெல்லாம் முடிவே வராதா?’ என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த போது ஒரு நாள் ஜெயா அழுது கொண்டே வந்தாள். வீட்டிற்கு தெரிந்துவிட்டதாம். பிரச்சனை ஓவராகி அவளது அப்பா அடித்துவிட்டாராம். பார்க்க பாவமாயிருந்தது. “என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று கேட்டபோது,

”இடியட். வீட்டில் மாட்டிக் கொண்டுவிட்டோம் என்றதும், நான் தான் அவனைத் தொல்லை செய்து காதலித்ததாய் என் அப்பாவிடம் சொல்கிறான். என்னை மோப்பம் பிடித்தலையும் நாயைப்போல மோந்து கொண்டு அலைந்ததை மறந்துவிட்டானா..? இல்லை நான் வேண்டாமென்று நினைத்துவிட்டானா? இவனை மாதிரி பூச்சியைக் காதலித்தேன் பார் என்னை செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்” என்று மூச்சு வாங்கப் பேசிவிட்டு அழ ஆரம்பித்தாள். மனசுக்குள் சந்தோஷமாய் இருந்தாலும், அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். நிமிர்ந்து என்னைப் பார்த்தவள் என்னை அணைத்து “தேங்க்ஸ் சங்கர்” என்று சொல்லிவிட்டு எதுவும் சொல்லாமல் போனாள். என் மனதினுள் “தம்தன் தம் தன” என்று பாட ஆரம்பித்தது.
பிறகு ஒரு நாள் மதியம் போன். பதட்டமான குரலில் “உடனே உதயம் தியேட்டருக்கு வா… ஒரு ப்ராப்ளம்” என்றாள். போன போது அவளும் சில சிநேகிதிகளுமாய் நின்றிருந்தார்கள். பக்கத்தில் அவன் நின்றிருந்தான். என்ன விஷயம் என்று கேட்டபோது, கடந்த சில நாட்களாய் அவன் தன்னைத் தொடர்வதாகவும், கேட்டால் மீண்டும் தன் காதலைப் புதுப்பிக்க, தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி துரத்துகிறான் என்றாள். நான் அவனைப் பார்த்தேன். பாவமாயிருந்தது. தோள்மீது கைபோட்டு அவனை தனியே அழைத்துச் சென்றேன். அவன் வர மறுக்க, அழுத்தித் தள்ளிப் போனேன். அழுத்தம் தாங்காமல் வந்தான். காதருகில் “வேணாம் விட்ரு தம்பி.. அவதான் உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டால்ல” என்றேன்.
“இல்ல..சார்.. நாங்க ரொம்ப க்ளோஸா பழகியிருக்கோம்” என்றான்.
”சரி.. விடு.. பொண்ணுங்களை நாம பாலோ பண்ணக்கூடாது. அவளுங்கத்தான் நம்மளை பாலோ பண்ணனும். என்ன புரியுதா?. இன்னொரு வாட்டி அவ உன்னைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணா.. சரி விடு” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் சட்டென திமிறி, “முடியாது என்ன செய்வே?” என்று எகிற, தூரத்திலிருந்து ஜெயா பார்த்துக் கொண்டிருந்தாள். பளீரென அவன் கன்னத்தில் ஒர் அறை அறைந்தேன். அவன் அதை எதிர்ப்பார்க்கவில்லை. விதிர்த்துப்போய் ஏதும் சொல்லாமல் பின்வாங்கி கூட்டத்தில் கலந்து போனான். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் என்னையே பார்ப்பதை உணர்ந்து “ சும்மா பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டேயிருக்கானுங்க” என்று சொல்லியபடி ஜெயாவைப் பார்த்து நகர்ந்தேன்.
ஜெயா என்னை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு பெருமையாய் இருந்தது. தோழிகள் கூட என்னை ஒரு ஹீரோவாக பாவித்து “தாங்கஸ் சங்கர்” என்று கைகுலுக்கிப் போனது அந்த ‘தம்தன தம்தன’ இன்னும் கொஞ்சம் கூடுதல் வால்யூமில் கேட்டது.
அதன் பிறகு அவனிடமிருந்து எந்தவிதமான தொந்தரவுமில்லை என்று சொன்னாள். ஆனால் தொந்தரவில்லை என்று சொன்னாளே தவிர, அடிவாங்கியதை வைத்து சிம்பதி தேடிக் கொண்டு மீண்டும் அவனோடு சேர்ந்து அலைவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் காதல் மீண்டும் மலர்வதற்கு என் ஹீரோயிசமே காரணமானது வருத்தமாக இருந்தது. இம்முறை நான் அவர்களை மேலும் நெருக்கமாய் பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன். கோபம் கோபமாய் வந்தது. அவளை நிறுத்தி வைத்து பளீர் பளீரென அறையலாமா? என்று தோன்றியது. ஆனால் அதெல்லாம் ஒரு கணம்தான். அடுத்த நொடி ஜெயாவின் அழகு முகம் வாடுவதை, மனக்கண்ணிலும் கூட பார்க்கச் சகிக்காமல் விட்டுவிடுவேன்.
அதன்பிறகு நான் அவர்களைப் பற்றி பெரியதாய்க் கவலைப்படவில்லை. “நமக்கில்லை… கிடைக்கமாட்டாள்” என்று தெரிந்துவிட்டதால் அவளின் மேல் நாட்டம் குறைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்களின் காதல் மீண்டும் பிரசசினைக்குள்ளாகி, இரண்டு குடும்பமும் அடிதடி வரை போனதாய் செய்தி வந்தது. ஜெயாவின் அப்பா தீவிரமாய் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து எல்லாம் நிச்சயமான நேரத்தில்தான் ஜெயா அப்படி ஒரு கேள்வியை கேட்டாள்.


என்னால எப்படி இன்னொருத்தனோட கல்யாணங்கிற பேர்ல படுக்க முடியும்அசிங்கமா இருக்கு. எஜாக்குலேஷன் போது அருவருப்பா இருக்காது? நான் என்ன எச்ச துப்புற தொட்டியா..? செத்துரலாமான்னு தோணுது சங்கர்.
”அப்படின்னா..?”
தலை குனிந்தபடி.. “ஆமா.. எங்களுக்குள்ள செக்ஸ் நடந்துவிட்டது மூன்று முறை.”
நான் கொஞ்ச நேரம் ஏதும் பேசாமலிருந்தேன். “சரி.. இப்ப உனக்கென்ன பிரச்சனை உனக்கு? எஜாக்குலேஷன்… எச்ச துப்புற தொட்டி அது இதுன்னு பேசறே? என்ன வேணும் உனக்கு?”
“என்னால வேறொருத்தனைக் கல்யாணம் செஞ்சிட்டு வாழ முடியாது சங்கர்”
“பின்ன அவனையேதான் கல்யாணம் செய்யணுமின்னு நினைச்சா உங்கப்பாகிட்ட சொல்லு. இல்லை வா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கிறேன். பண்ணிட்டு கால்ல விழுந்திரு.”
“சே.. அவனோட கல்யாணமா.. இம்பாஸிபிள். ஒரு நிரந்தர வேலையில்லை. அதோடு இரண்டாவது முறை பிரச்சனையில் ஒரு பெரிய விரிசல் விழுந்துவிட்டது. அது மீண்டும் சேராது. உன்னால் கூட என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லையா சங்கர்?.”
“புரியுது ஜெயா.. யூ ஆர் கில்டி. ஒரு வேளை இந்த கன்னித்தன்மை, கற்பு போன்ற தமிழ்க் கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் உன்னை தமிழ்ப் பெண்ணாக மாத்திருச்சோன்னு தோணுது” என்றேன்.
ஒரு மாதிரி விரக்தியாய் சிரித்தாள். “உனக்கு புரியலை.. உனக்கு புரியலை” என்று திரும்பத்திரும்ப புலம்பிக் கொண்டேயிருந்தவள், சட்டென டேபிளின் மேல் இருந்த ஒரு பென்சில் சீவும் ப்ளேடை எடுத்து கையை கட் செய்ய முயல, சடுதியில் அதை கவனித்து, அவளின் கையைப் பிடித்திழுத்து, தடுத்தேன்.
“முட்டாளா நீ..? என்ன ப்ரச்சனை? செத்தா சரியாயிருமா? எதுவாயிருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு ஆன்சர் இருக்கு. ஓகே. முட்டாள்.. முட்டாள்” என்று மீண்டும், மீண்டும் திட்டினேன். அதில் என் பதட்டம் தெரிந்தது. ஒரு மணி நேரம் வரை ஏதும் பேசாமல் அழுது கொண்டிருந்தாள். எனக்கு அவள் பிரச்சனையின் சீரியஸ்னெஸ் புரிந்தது. நிச்சயம் ஒரு கவுன்சிலிங் தேவை. டாக்டரிடம் கூட்டிப் போகலாமா? என்று யோசித்து “ஜெயா.. நாம வேணுமின்னா.. டாக்டர் கிட்ட ஒரு கவுன்சிலிங் போகலாமா?” என்றதும், எதிரில் உட்கார்ந்திருந்த என்னை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். நான் ஏதும் சொல்லாமல் அவளை அணைத்துக் கொண்டு, தலையைக் கோதிவிட்டேன், கண்ணீரை துடைத்துக் கொண்டேயிருந்தேன். அவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்ந்தது.
“ஜெயா நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு”
ஏதும் பதில் சொல்லாமல் என் மேல் சாய்ந்தபடி மேலண்ணத்தில் பார்த்தாள்.
“நான் யாரு உனக்கு?”
சட்டென யோசிக்காமல் என்னை மேலும் இறுக்கி ”என் ப்ரெண்ட். என்னை எப்போதும் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடும் என் இனிய நண்பன். ஏன்?” என்றவள் சொன்னதும், எனக்கு துணுக்கென்று கண்ணீர் தளும்பியது. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,
”ஓகே.. அப்ப நான் சொன்னா கேட்பேயில்லை?”
“ம்”
“இதெல்லாத்தையும் மறந்துட்டு அப்பா சொல்ற பையனை கல்யாணம் செய்திட்டு நிம்மதியா இரு.”
“முடியலை.. நினைக்க நினைக்க என்னைப்பத்தி அசிங்கமா ஃபீல் செய்யறேன்.”
“தபாரு ஜெயா.. உங்களுக்குள்ளே நடந்தது இயல்பான செக்ஸ்.. இரண்டு பேரோட சம்மதத்தின் பேர்ல நடந்திருக்கு. அதுல கிடைச்ச சந்தோசம், த்ரில் எல்லாமே ரெண்டு பேருக்குமே ஒரு இனிமையான அனுபவம். ரெண்டு பேருக்கும் சந்தோஷமாத்தானே இருந்தது. செக்ஸ் இஸ் எ டூல் ஃபார் எக்ஸ்பிரசிங் யுர் லவ். அவ்வளவுதான். இதோ நீ என்னை இப்ப கட்டிப்பிடிச்சிருக்க, ரெண்டு பேருக்குமிடையே எந்த விதமான செக்‌ஷுவல் உணர்வுகள் இல்லை. ஆனா நான் உன்னை அணைச்சிருக்கிறதும் ஒருவிதமான எக்ஸ்பிரஷன் தான். டேக்கிங் கேர் ஆப் யூ.. உன்னோட அணைப்பில இருக்கிற உணர்வு அதை தேடுறது. இதே செக்ஸ் உன் விருப்பமில்லாம நடந்திருந்தா அதோட விஷயமே வேற. அவனோட செக்ஸ் வச்சிக்கும் போது உனக்கு அவனைத்தான் கல்யாணம் செய்யப் போறோமேன்னு ஒரு நம்பிக்கையிருந்திருக்கும். ஆனா அது இப்ப உடைஞ்சி போனதும் உனக்குள்ள குற்ற உணர்ச்சி ஜாஸ்தியாயிருச்சு. அதை ஏத்திவிடத்தான் கற்பு, தமிழ்க் கலாச்சாரம், அது இதுன்னு இன்னும் நிறைய.. விஷயம் இருக்கவேயிருக்கு.. ஸோ… தேவையில்லாம கன்ப்யூஸ் ஆகாதே.. அப்படியும் உனக்கு உறுத்திச்சின்னா.. இப்படி யோசிச்சிப் பாரு.. மரத்துக்கீழே நிக்கும்போது காக்கா எச்சமிட்டு போயிரும். நமக்கு உடம்பே ஒரு மாதிரி அருவருப்பா இருக்கும். ஆனா அதுக்காக அடுத்த நாள் மரத்தடியில நிக்காமத்தான் இருக்கோமா? திரும்பவும் எச்சம் பட்டா கீழக் கிடக்குற பேப்பரை எடுத்து துடைச்சுப் போட்டுட்டு போகாமத்தான் இருக்கோமா? பீ…க்ளியர். செக்ஸ் இஸ் நாட் எ டாபூ.. இஸ்ட் எ எக்ஸ்பீரியன்ஸ். இதை நீ புரிஞ்சிக்க ஆரம்பிச்சா.. உன்னோட வாழ்க்கை நல்லாருக்கும்.”.
அன்றைய பேச்சுக்கு பிறகு ஜெயாவிடம் அமைதி தென்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் மீண்டும், மீண்டும் இதைப் பற்றி பேசிக் கொண்டேயிருந்ததில் நார்மலாக ஆரம்பித்தாள். கல்யாணத்தன்று திருமணம் முடிந்து ரிஷப்ஷனில் அவளை விஷ் செய்ய கை குலுக்கிய போது அதில் ஒரு அழுத்தம் இருந்தது. “என் க்ளோஸ் ப்ரெண்ட்” என்று அவள் கணவனிடம் அறிமுகப்படுத்தினாள்.
அடுத்த நாள் காலையில் எனக்கு ”நத்திங் ஹேப்பெண்ட்” என்று மெசேஜ் அனுப்பினாள். சிரித்துக் கொண்டேன். ஒரு வாரம் கழித்து ஹனிமூன் போய்விட்டு வந்து “தேங்க்யூ” என்று அடுத்த மெசேஜ் அனுப்பினாள். அதற்கு பிறகு எங்களுக்குள் பெரிய தொடர்பு இல்லை என்றாலும், அவளின் நினைப்பு எனக்குள் வந்து கொண்டேயிருக்கும். அவளும் அமெரிக்கா போய் ரெண்டு வருஷமாகிவிட்டது. எப்போதாவது மின்னஞ்சல் மட்டுமே தொடர்பிலிருந்த நேரத்தில் தான் அவள் சென்னை வருவதாய் ஒரு மின்னஞ்சல் வந்தது. முக்கியமான விஷயமாய் சென்னை வருவதாகவும், ‘உன் ஹெல்ப் வேண்டியிருக்கு நிச்சயம் நான் உன்னை மீட் செய்யணும்” என்றிருந்தாள்.
பெசண்ட்நகரில், பீச் ரெஸ்டாரண்டில் சந்தித்தோம். முன்னைக்கு ஒரு சுற்று பெருத்திருந்தாள். அதே ஈரானிய சிவப்பு அமெரிக்க செழுமை மேலும் சிகப்பாக்கியிருந்தது. புடவை கட்டி, உச்சியில் பொட்டிட்டிருந்தாள். மிகவும் ட்ரெடிஷனலாய் இருப்பதாய்ப் பட்டது. கூடவே கண்களில் மென் சோகத்துடன் ஓர் இளம் பெண்ணை அழைத்து வந்திருந்தாள். இன்றைய இளைஞிகளின் அத்துனை பாடி லேங்குவேஜுகளும் இருக்க, என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எனக்கென்ன என்று வேறெங்கோ பார்த்தபடி ஐபாட்டை நோண்டிக் கொண்டிருந்தாள்.
“எப்படி இருக்கே?”
“எனக்கென்ன.. ரொம்ப நல்லாருக்கேன். நீ தான் இன்னும் குண்டடிச்சிட்டே.. “
“எதோ முக்கியமான விஷயமாய் பேசணுமின்னு சொன்னே?”
“யா.. இட்ஸ் அபவுட் ஹர். ரோஷ்ணி. என் மச்சினி. முளைத்து மூணு இலை விடவில்லை.. காதலாம். பைனல் இயர் படிக்கிறதுக்குள்ளே என்ன காதல் வேண்டியிருக்கு. யு.. நோ.. தே ஹேட் செக்ஸ்.. கொஞ்சம் கூட உறுத்தலேயில்லாம சொல்றா.. வீட்டுல என் மாமியார் ரொம்பவும் ட்ரெடிஷனல். அவனோ வேற ஜாதி. நமக்கு ஒத்து வராதுன்னு சொன்னப்ப.. ஷி அட்டெம்டெட் ஸூசைட். ஓ. காட்.. அதுலேர்ந்து உடனே இந்தியா…வா..இந்தியாவான்னு ஒரே பிடுங்கல். நீயே சொல்லு சங்கர்.. இவளை எப்படி டீல் செய்யறது? எல்லாம் வயசு கோளாறு.. கிடந்து அலையுறாங்க..” என்று படபடவென பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ரோஷ்ணி இன்னமும் வேறு திசையில் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

நன்றி; cablesankar.blogspot.com

 
1 Comment

Posted by மேல் பெப்ரவரி 1, 2012 in சிறுகதை

 

குறிச்சொற்கள்: , , , ,

காமக் கடும்புனல்

வீடு துறந்து செல்பவர்கள்

திரும்புவதில்லை

வெளியில் ஒருத்தி அமைந்துவிட்டால்.

சிறு காலமே நீடிக்கும் இன்பம்

என்பதால் அல்ல

சிறியவர்கள் அடையும் இன்பம்

என்பதால் அல்ல

அந்த இன்பத்தை அடைய

எந்தச்சிறுமையும் அடைவர்

என்பதால்

அது சிற்றின்பம்.

மலையும் மலை சார்ந்த இடமும்

கொங்கைக் குறிஞ்சி

காடும் காடு சார்ந்த இடமும்

கூந்தல் முல்லை

வயலும் வயல் சார்ந்த இடமும்

வயிற்று மருதம்

கடலும் கடல் சார்ந்த இடமும்

வாய் நெய்தல்

மணலும் மணல் சார்ந்த இடமும்

முதுகுப் பாலை.

-மகுடேஸ்வரன்.

 
Leave a comment

Posted by மேல் ஜனவரி 18, 2012 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்: ,

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 54 other followers