RSS

காமக் கடும்புனல்

வீடு துறந்து செல்பவர்கள்

திரும்புவதில்லை

வெளியில் ஒருத்தி அமைந்துவிட்டால்.

சிறு காலமே நீடிக்கும் இன்பம்

என்பதால் அல்ல

சிறியவர்கள் அடையும் இன்பம்

என்பதால் அல்ல

அந்த இன்பத்தை அடைய

எந்தச்சிறுமையும் அடைவர்

என்பதால்

அது சிற்றின்பம்.

மலையும் மலை சார்ந்த இடமும்

கொங்கைக் குறிஞ்சி

காடும் காடு சார்ந்த இடமும்

கூந்தல் முல்லை

வயலும் வயல் சார்ந்த இடமும்

வயிற்று மருதம்

கடலும் கடல் சார்ந்த இடமும்

வாய் நெய்தல்

மணலும் மணல் சார்ந்த இடமும்

முதுகுப் பாலை.

-மகுடேஸ்வரன்.

 
Leave a comment

Posted by மேல் ஜனவரி 18, 2012 in கவிதைகள்

 

குறிச்சொற்கள்: ,

உடல் ஆசைகள் அதைப் புரிந்துகொள்கிற மாதிரி தெரியவில்லை!

My Dear Friend,

உங்களுடைய GREETINGS WITH LETTER கிடைத்தது. என்னால் ஆச்சர்யத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நிஜமாகவே நீங்கள்தானா? நம்பவே முடியவில்லை.ஜோர்டான் என்பது எங்கே இருக்கிறது என்பதை இனிமேல்தான் மேப்பில் தேடிப் பார்க்கப் போகிறேன். அடுத்த மடலை விரைவாகவும் என்ன நடந்தது? எப்படி ஜோர்டான் போனீர்கள்? இப்போது என்ன வேலை. திரும்பவும் இந்தியா திரும்புவது எப்போது? என்ற முழு விபரங்களுடன் நீண்டதாகவும் எழுதுங்கள்.

உங்கள் மனைவியும், குழந்தையும் நலம்தானே! அதற்குப் பிறகு குழந்தை ஏதும் இல்லைதானே! இப்போது அவள் எத்தனையாவது படிக்கிறாள்? எந்த ஸ்கூலில் படிக்கிறாள்? உங்களைப் பிரிந்திருக்க உங்கள் மனைவி எப்படி சம்மதித்தார்?

நீண்ட நாளைக்கு அப்புறம் உங்களின் கையெழுத்தைப் பார்த்ததும் நான் சிலிர்த்துப் போய்விட்டேன். திருவிழாவில் தொலைந்துபோன குழந்தையின் கால்சட்டையைப் பார்த்த தாயின் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

செல்வம் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாதவர்களும், தெரியாதவர்களும் உலகில் நிறைய உண்டு. அந்த மாதிரிதான் உங்கள் மனைவி என்று நினைக்கிறேன். அழகு, அறிவு, ரசனை, தெளிவு, கம்பீரம் என அனைத்தும் நிரம்பிய உங்களின் தவிப்பைப் புரிந்து கொள்ளாமல், தானும் அனுபவிக்காமல், உங்களையும் சந்தோஷப் படுத்தாமல் வாழ்க்கையை வீண்டித்துவிட்டாரே என்றுதான் வருத்தமாக உள்ளது.

உயிரே! உங்களுடைய ஆசையும் தவிப்பும், வேகமும் ரசனையும் எனக்கு நன்றாகத் தெரியும். இங்கே இருந்தாலாவது மாதத்தில் ஒரு முறையேனும் அரைகுறையாக உங்கள் மனைவி மூலம் அதைத் தீர்த்துக்கொள்வீர்கள். ஆனால் இப்போது தூரதேசத்தில் என்னதான் செய்வீர்கள் என்று நினைத்தால் என்னால் தாங்க முடியவில்லை. அதற்காக விபச்சாரிகள் யாரிடமும் போய்விடாதீர்கள். ப்ளீஸ்… உடம்பு கெட்டுப்போகும்.

என்னைப்பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்தால் அதைக்கூட தாங்கும் மனப்பக்குவம் வந்துவிடுகிறது. இப்போதைய என் ஒரே ஆறுதல் குழந்தை ஒன்றுதான். இவளுடைய சிரிப்பில் என் எல்லா சோகங்களையும் மறக்கிறேன். நீங்கள் மட்டும் தைரியமாக ஒரு முடிவெடுத்திருந்தால், அதே சமயம் பொருளாதாரத்திலும் ஓரளவு நல்ல நிலைமையிலிருந்திருந்தால் உங்களைச் சார்ந்து வாழ்ந்து நான் சந்தோஷப்பட்டிருப்பேன்.

குழந்தை பிறந்த மூன்றாவது மாதம் ஒரு லட்சம் என் கணவருக்கு லாட்டரி விழுந்தது. முன்பே இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்திருக்கும் போல. பணம் வந்த ஆசையில் எல்லா வேலைகளையும் மூட்டை கட்டிப் போட்டுவிட்டு பெரிதாக லாட்டரி விற்கும் கடை துவங்கினார்.

அதிலிருந்து வாழ்க்கை முறையே மாறிப்போச்சு. வீட்டுக்கு வரும் நேரம் மிகமிகக் குறைச்சல். பல நாள் இரவில் வருவதே இல்லை. நான் பார்க்கும் நேரமெல்லாம் குடிபோதையில்தான் இருக்கிறார். உடன் கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருக்கும் போல.

வாழ்க்கையில் அதிகபட்சம் எவ்வளவு ஏமாற்றத்தை சந்திக்க முடியுமோ அத்தனையும் சகித்துக் கொண்டு ஊமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மனநிலை வேண்டுமானால் மாறிவிடுகிறதே தவிர, உடல் ஆசைகள் அதைப் புரிந்துகொள்கிற மாதிரி தெரியவில்லை!

பழைய முறைகளும், சுஜியும்தான் இதை சரிசெய்யப் பயன்படுத்தும் ஆயுதங்கள். சுஜிக்கு திருமணம் ஆகிவிட்டதை உங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன்தானே! ஆனால் அவளுக்கு ஏனோ இன்னும் குழந்தை இல்லை.

உங்களிடம் சொல்ல பல விஷயங்கள் உள்ளது. அதையெல்லாம் எழுதலாமா? கடிதம் ஒழுங்காக கிடைக்குமா? அங்கே கடிதத்துக்கெல்லாம் சென்ஸார் கிடையாதுதானே!

விரிவாக எழுதுங்கள்.

அன்புடன்,

உங்கள் தோழி!

 
 

குறிச்சொற்கள்: , , , , , ,

தீயைத் தூண்டி விட…

சில விஷயங்கள் மட்டுமே அனைவராலும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். உதாரணமாக செக்ஸை சொல்லலாம். தினமும் சிறப்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்பதை உலகமெங்கும் உள்ள மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால்  தாம்பத்யம் எனபதே சிரமமாக மாறியவர்களோ வயாகரா போன்ற செக்ஸ் ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தி தங்களது உணர்வுகளை அதிகரித்துக் கொள்கின்றனர். 1988 ஏப்ரலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட வயாகரா விரைவிலேயே 3 மில்லியன் நபர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வாய்வழி மாத்திரை ஆண்மைக் குறைவை நிவர்த்திப்படுத்துவது மட்டுமின்றி ஒருவரது செக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்துவதிலும் சிறந்து விளங்கியது. ஆரம்பத்தில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது, தற்செயலாக ஆண்மைக் குறைவையும் நிவர்த்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து உலகின் பல பகுதிகளிலும் அங்கிருந்த உள்ளூர் செக்ஸ் ஊக்க மருந்துகளுக்குப் போட்டியாக திகழ்ந்து வருகிறது.

2005 இல் இந்தியாவில் வயாக்ரா அறிமுகப்படுத்தப்பட்டபோது எளிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த அபூர்வ மாத்திரை எழுச்சிக் குறைபாட்டுடன் இருந்த 100 மில்லியன் இந்தியர்களுக்கான மந்திரச் சொல்லாகிவிட்டது. 50 மிகி மாத்திரை 463 ரூபாய் விலையில் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. உள்ளூர் சந்தைகளில் இதன் 15 வெவ்வேறு வடிவங்கள் 22 ரூபாய் விலை முதல் கிடைக்கிறது.

தனது துணையைத் திருப்திப்படுத்த யுனானி மருந்தை நம்பியிருந்த ராஜேஷ் திரிபாதி இப்போது வயாக்ராவைப் பயன்படுத்துகிறார்.  “உடனடி பலன் தருவதில் வயாக்ராவுக்கு ஈடுஇணையில்லை. நான் யுனானி மற்றும் இதர உள்ளூர் மருந்துகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்போது இந்த நீலநிற மாத்திரையையே விரும்புகிறேன். மற்ற மருந்துகள் என்னைத் தூண்டுவதற்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும் போது, இது உடனடியாகத் தூண்டுவதோடு 100 சதவிகிதம் பலனைத் தருகிறது. மேலும் இந்த மாத்திரை நீண்டநேரம் செயல்படவும் உதவுகிறது என்கிறார்.

இதனால் வயாகரா முழுமையாக உள்ளூர் மருந்துகளைக் காலி செய்துவிட்டது என்று பொருளில்லை. கிராமப்பகுதிகளிலும் வயாக்ராவின் பக்கவிளைவு காரணமாக அதைச் சாப்பிட பயப்படுபவர்களின் மத்தியிலும் இவர்கள் செல்வாக்குடன் திகழ்கின்றனர்.

இந்த உள்ளூர் மருந்துகளுக்கு தனி சந்தை உள்ளது. இப்போதும் பலர் யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகளே பாதுகாப்பானவை என்று நம்புகின்றனர். ஆனாலும் வயாகராவுக்கு இணையான மாற்று மருந்து யுனானியில் இல்லை.

வயாகரா ரத்த ஓட்டத்தை அதிகரித்து செக்ஸ் திறனை அதிகரிக்க மட்டுமே செய்கிறது. அளவுக்கு அதிகமாக வயாக்ராவைப் பயன்படுத்தினால் தலைவலி, ரத்த ஒழுக்கு, ஹார்ட் அட்டாக் போன்றவை வரக்கூடும். ஆனால் யுனானியில் இதுபோன்ற பிரச்னை எதுவும் இல்லை.

சீதாராம் பாரதி மருத்துவமனையின் சிறுநீரக துறையின் தலைமை மருத்துவரான எஸ்.வி. கோட்வால், வயாகராவின் வருகை இதற்கு முன்பு வேறுவழியில்லாமல் இருந்த மக்களுக்கு ஒரு வழியைத் திறந்துவிட்டுள்ளது என்கிறார். ‘இப்போது வயாகராவின் பல வடிவங்கள் எளிதாக இந்தியாவில் கிடைக்கின்றன.’ நானே என்னுடைய பல நோயாளிகளுக்கு வயாகராவை பரிந்துரைத்துள்ளேன்’ என்கிறார்.
எழுச்சியுடன் திகழவேண்டும் என்ற கூட்டம் அதிகரித்திருப்பதன் காரணமாக ஹோமியோபதியும்கூட இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உள்ளது என்கிறது. ஆனாலும் ஹோமியோபதியில் உடனடி நிவாரணம் கிடையாது. நீண்டகால சிகிச்சைக்கு உட்பட்டாக வேண்டும்.

ஹோமியோபதியில் தாமியானா, சாலிமம் போன்றவை உள்ளன. யோகாவில் உள்ள சில ஆசனங்கள்கூட செக்ஸ் உணர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன. உள்ளூரில் உள்ள செக்ஸ் உணர்வைத் தூண்டும் மருந்துகளோடு ஒப்பிடுகையில் வயாகரா மிகவும் விலை மலிவானது என்பதே அதன் பெரிய பலம். 300 ரூபாய் செலவில் தாம்பத்யத்தில் படிப்படியான முன்னேற்றம் அடைவதை ஒருவர் உணரமுடியும்.

கட்டுரை; த சன்டே இந்தியன்

 
Leave a comment

Posted by மேல் ஜனவரி 7, 2012 in கட்டுரை

 

குறிச்சொற்கள்: , ,

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 52 other followers